முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.
Showing posts with label வணக்கம். Show all posts
Showing posts with label வணக்கம். Show all posts

Friday, March 20, 2015

வருக வருக

வணக்கம்.

தங்கள் வரவு நல்வரவாகுக.

சங்கத்தமிழ் என்னும் இனிய சோலைக்குள் உங்களை இட்டுச்செல்லும் நுழைவாயில் இது.

அச் சோலையின் இன்னிழலில் தங்கள் இனிய பொழுதை இனிதே கழியுங்கள்.

இங்கே பாடல்கள் உண்டு, உரைகள் உண்டு, ஆய்வுகளும் உண்டு.

சங்கச் செய்யுள்கள் ஒவ்வொன்றும் ஒரு தங்கச் சுரங்கம் போன்றவை.

அவற்றுள் நுழைந்து அங்கே பாளங்களாய்க் கிடக்கும் பொற்குவியலைக் கண்டு வியந்துபோவீர்கள்.

நன்றி.

ப.பாண்டியராஜா