முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Thursday, March 19, 2015

நெடுநல்வாடை-சொற்பிரிப்பு மூலம்


நெடுநல்வாடை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ                                                    திரு 1,முல் 1
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்                                      முல் 15
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி                                               மலை 408       
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல்                               5
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை                                                          10
கன்று கோள் ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ                                            மலை 101
பொன் போல் பீரமொடு புதல்புதல் மலர
பை கால் கொக்கின் மென் பறை தொழுதி                            15
இரும் களி பரந்த ஈர வெண் மணல்
செம் வரி நாரையோடு எ வாயும் கவர
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை                                     முல் 100
அகல் இரு விசும்பில் துவலை கற்ப                                       20                       பெரும் 1
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க                                             பெரும் 353
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு                                    25



தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற                                                   மது 400

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்                                                                    திரு 71,மது 429
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்                  30                மது 359
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்                                          பெரும் 60,பட் 294
முடலை யாக்கை முழு வலி மாக்கள்                                                      பெரும் 61
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர          35
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண்
மடவரல் மகளிர் பிடகை பெய்த                                                                 மது 397
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து                           40
அம் இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது                                                முல் 10
மல்லல் ஆவணம் மாலை அயர
மனை உறை புறவின் செம் கால் சேவல்                             45
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர்
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக                             50
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து                          55
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப
கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த                                       நெடு 85
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க                                                   பெரும் 236
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்                            60
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்                              65
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப                 70           மலை 534
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து                                      75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ                              80
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து                         85           நெடு 57
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை                                                     திரு 228,மது 354
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்                                                                  திரு 70
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து                           90
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து                 95           பட் 114
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல                                             பெரும் 226
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில்                              100         திரு 238
யவனர் இயற்றிய வினை மாண் பாவை                                                         பெரும் 316,முல் 61,85
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க                         105
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின்
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின்
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ                                      110
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ்
செம்பு இயன்று அன்ன செய்வுறு நெடும் சுவர்                                     மது 485
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்              115
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப                          120
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில்
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி குத்துறுத்து                          125
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து                                  130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட
துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து                                                               மது 721
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை                                    135
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து
நல் நுதல் உலறிய சின் மெல் ஓதி
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்                                  140
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை                                              பொரு 32
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து
வாளை பகு வாய் கடுப்ப வணக்குறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்                                145
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்                     150
மெல் இயல் மகளிர் நல் அடி வருட
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி
இன்னே வருகுவர் இன் துணையோர் என                           155         முல் 16,20
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக                                  160
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து         
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா                        165
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு                                     பொரு 31
இன்னா அரும் படர் தீர விறல் தந்து
இன்னே முடிகதில் அம்ம மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை                                 மலை 227
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள                                    170         முல் 70
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து
வடந்தை தண் வளி எறிதொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல                               175         மலை 4
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட பின்னர்
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு
பருமம் களையா பாய் பரி கலி மா
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப                       180
புடை வீழ் அம் துகில் இட வயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப                                   185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே
 

No comments:

Post a Comment