முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Thursday, March 19, 2015

மதுரைக் காஞ்சி-அடிநேர் உரை


மதுரைக்காஞ்சி
மாங்குடி மருதனார்

 
உயர்ந்து எழும் அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும்
முழக்கத்தையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு,
தேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடைய
மலைகள் முளைத்துஎழும் அகன்ற உலகத்தின்கண் -
வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல,                                                                                     5
அகன்ற நாள்மீன்கள் (தாம் நடக்கும்)பாதையில் ஒழுங்காக நடக்க,
பகலை உண்டாக்கும் சிவந்த கதிரவனும்
இரவில் (ஒளி)செய்யும் வெண்மையான திங்களும்
குற்றமற்றுத் தோன்றி விளங்க,
முகில் (தன் பெய்தல்)தொழிலை (வேண்டுங்காலத்தே செய்து)உதவ, (எல்லாத்)திசைகளும் தழைக்க,                         10
(ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை விளைய,
விளைநிலங்களும் மரங்களும் பயன்தருதலை மேற்கொண்டு தழைப்ப,
பிணிகள் நீங்கி அழகு விளங்க,
மகிழ்ந்து நிற்க (மேம்பாடு தக), - (மிகவும் பொலிவுபெற்ற
உயர்ந்த நிலையையுடைய வலிமைமிக்க திசையானைகள்)                                  15
பார்த்து (ஆசை)தணியாத கண்ணுக்கு இனிமையினையும்,
உண்டு குறையாத மிகுந்த வளத்தையும்,
உயர்ந்த (இரு)பக்கங்களையும் உடைய சீரிய தெருவிலிருக்கும்,
பொய்மையே அறியாத (தங்களின்)வாய்மொழியால்
புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு                                                                          20
நல்ல ஊழிக்காலம் எல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க,
பல வெள்ள காலத்திற்கு புகழ் மிகுந்து சொல்லப்பட,
உலகத்தை ஆண்ட உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே -
பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய                                                                             25




இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச்
செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட,
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்
வலிமிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை                                      30
வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்க,
வெல்லுதற்கு அரிய கடிய வலியினையும்,
வெற்றி விளங்கிய சீரிய கொடும்தொழிலினையுமுடைய
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,                                                                                                                   35
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
வீரர்க்கு வேள்விசெய்யும்படி,
போரினை வெல்லும் அகன்ற படையினையுடைய
தென்னவன் என்னும் பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய                         40
பழைய முதிர்ந்த கடவுளின் வழித்தோன்றிய,
மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே -
சீரிய முகபடாத்தையுடைய, விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையுடைய
கடும் கோபத்தையுடைய, கமழுகின்ற மதநீரால்
சேறுண்டான நறிய தலையையுடையவாய்                                                 45
மலையென்று (கண்டோர்)மருளும் உயர்ந்த தோற்றத்தினையுடைய,
போர்த்தொழிலே பயின்ற பெரிய யானை
வெகுளி மிகுந்து போர்க்களத்தில் பகைவரைக் கொன்றுதிரியவும்
குதிரைப்படை தோற்றுவித்த மிகுந்த நிறத்தையுடைய புழுதி
விரிந்த வானத்தில் வெயிலை மறைக்கவும்,                                                                                                                50
தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
வாட்போரில் மிகுந்த வலிமை (கொண்ட)மைந்தர்கள்
(தம்)தோளால் முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப்பெறவும் -
இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ                       55
பொருது அவரைப் போரில் வென்றும்,
விளங்குகின்ற அருவிகளையுடைய மலைகளைக் கடந்து
காடுகளைப் பிளக்கும் மாறுபாட்டையுடைய போராற்றலால்,
உயர்ந்து ஓங்கிய சீரிய தலைமையினால்,
நிலத்தைத் திருத்தித்தந்த பெரிய உதவியினையும் உடைய,                                                                                60
பொன்னால் செய்த மாலையை அணிந்த நெடியோன் வழியில் வந்தவனே -
மரங்களைச் சுட்டு மலைகளை நொறுக்கி விழச்செய்யும்
பெருமையினையுடைய இடிமின்னலின் இடி(முழக்கத்தைப்) போன்றவன் நீ,
சேர்தற்கரிய அடர்ந்த காவல்காட்டையும், ஆழ்ந்த கிடங்கினையும்,
உயர்ந்து வளர்ந்த, வரிசையான குறுவாயில்களைக்கொண்ட                                  65
நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும்,
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று,
கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடு,
தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,                                                                                                           70
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
வெற்றியோடே செறிந்து நடந்த
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்,
வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய              75
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
இனிய இசையை உடைய முரசம் முழங்க,                                                                                                                  80
பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் -
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த - அசைகின்ற இருக்கையினையும்,                                                                                              85
தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(சாலியூர் என்ற)ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே -
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)                                              90
(ஏற்றத்)தோடு மேலும் கீழும் இயங்கும் அகன்ற (நீரிறைக்கும்)சாலின் ஓசையும்,                                
குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிறைக்கின்ற
மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்,
கடா விடுபவர் எருதுகளுக்குப் பூணும் தெளிந்த மணியின் ஓசையும்,
பெரிய பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசையும், எந்த நாளும்                              95
(நீல)மணி போன்ற பூக்களையுடைய கழிமுள்ளிகளையுடைய மணல் மிக்க கடற்கரையிலிருக்கும்
பரதவப் பெண்டிர் (ஆடும்)குரவைக் கூத்தின் ஓசையுடன் கூடி ஆரவாரிக்க -
ஒரு பக்கத்தே, விழாக்கள் நிறைந்த அகன்ற ஊர்களில்,
முழவு (போலும்)தோளினையுடைய (கல்வியால்)மாறுபடுதலையுடைய பொருநர்க்கு
அச்சம் பொருந்திய பெரிய சிறப்பினையுடைய                                              100
(கன்றும் பிடியும் என்னும்)இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடன்                        
ஒளிர்கின்ற கொம்புகளையுடைய ஆண்யானைகளைக் கொடுத்தும்,
பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டியும்,
நன்மை அமைந்த அணிகலன்களைக் கொடுக்கும்
பல குட்ட நாட்டு அரசரை வென்ற வேந்தனே -                                              105
பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக,
நெற்கதிரின் ஓசையும், (அதனை)அறுப்பாரின் ஓசையும்,                                                                                        110
பறவைகள் ஆரவாரித்து ஒலிக்கும் ஓசையும், என்றும்
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட
குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின் ஓசையும்,                                                                                   115
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது வருவாயையுடைய
முதுவெள்ளிலை (என்னும் ஊரில் வாழும்) - புகழப்படுகின்ற
மிகுதியாய் விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய,                                                                                                       120
(கல்வி, கேள்வி என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த   
சிறிய ஊர்களின் பெரிய ஊழியர்கள்,
குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
பழைமையைக் கூறி ஏவல் கேட்டுநிற்க;
காற்றோ என்று சொல்லும்படி விரைந்து சென்று,                                                                                                      125
பகைவர் நாடு கெடத் தீமூட்டி,                                                                                                                                              
தலையாலங்கானம் என்கிற ஊரின்கண் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி,
அரசர்கள் விழும்படி போர்செய்து,
முரசைக்கொண்டு களவேள்வி வேட்ட
கொல்லுகின்ற ஆற்றல் மிக்க உயர்ந்த புகழையுடைய வேந்தனே -                           130
(உன்னுடன்)நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்துவாய்,                                                                          
(நீ)சினந்தவரின் அரசுரிமையை எடுத்துக்கொள்வாய்,
பெரிய நன்மக்களிடத்தே மேலாய்த் தோன்றுகையினாலே
புகழையுடைய விழுமிய தலைமையினையும்,
(நன்றாக)விளைந்து முதிர்ந்த சீரிய முத்தினையும்,                                                                                                  135
பளிச்சிடும் சங்கினையுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும்,                                                                       
கள்ளை(யே) உணவாகக்கொண்டோரின் குடியிருப்புப் பகுதிகளையும் உடைய,
நல்ல கொற்கை என்னும் ஊரிலுள்ளோர் விரும்பும் வீரவேந்தே -
(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்,                                       140
கொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,                        
புலால் (நாறும்)வில்லையும், பொலிவுடைய கூவைக்கிழங்கையும்,
வஞ்சினம் கூறுதலையும், ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையும் உடையவராகிய
தென்திசை மீனவர்களைப் பொருது அடக்கிய அரிமா போன்றவனே -
அரியவை (என்று எண்ணப்படுபவற்றை) எல்லாம் (மிக)எளிதாகக் கொண்டு,                                             145
உரியவற்றை எல்லாம் வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் (பிறர்க்குக்)கொடுத்து,                     
மிக விரும்பி (ஊரின்கண்)உறைவோம் என்று சொல்லாமல், மேற்கொண்டு புறப்பட்டு,
பனி ஒழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,
(பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு,
ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,                                                                                 150
(அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே -      
மிக்க பகையுடையோர் நிலத்தில் புகுந்து, அவரின்
காவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து,
குன்றுதல் அறியாத பெரிய மருதநிலங்களை
(செந்)நிறக் கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட,                                                                                   155
நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,
பசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்க,
ஊர்கள் இருந்த இடமெல்லாம் பாழிடம் ஆக,
ஒளிர்கின்ற வளை அணிந்த இள மங்கையர்
துணங்கைக்கூத்தையும், சீரான குரவைக்கூத்தையும் மறக்க,                                                                               160
அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட,
இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்
நிலத்தில் கிடந்த திரளான வாயில்(நிலை)களில்                                             165
துன்பம்கொண்ட பெண்கள் வருந்தியவராய் அழுதுநிற்க,
வளமையான ஊர்களிலிருந்த குடிகள் பசியால் வருந்தி,
செழுமையுள்ள (தம்)உறவினரின் பாதுகாப்பில் சென்றுசேர,
பெரிய மாளிகைகளில் வீழ்ந்துகிடக்கும் கரிந்துபோன குதிர்களில் தங்கியிருக்கும்
கொண்டையையுடைய கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப,                                                        170
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர,
நல்ல ஏர் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்
பல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய,
(மனிதர்)வாழாமற்போனதால் பிழைப்பு மிகவும் கெட்டு                                      175
பாழ்நிலம் ஆயின நின் பகைவர் நாடுகள் -
எழுந்துயராத தோளினையும், முழங்குகின்ற ஓசையையும்,
பெருமையையுடைய கால்களையும், உயர்ந்த கொம்பினையும் உடைய
கடிய சினங்கொண்ட யானைகளை எங்கும் பரப்பி,
விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு                                           180
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று,
விரிந்த விசும்பெங்கும் ஆரவாரம் முழங்க,
மழை போல அம்புகளை ஏவி,
பல குதிரைகள் துகள்களை எழுப்ப,
சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,                                                                                                                                 185
பெருமை அழியும்படி வென்று கொன்று, பகைவரின்
நாடுகள் அழியும்படி (அவரின்)அரண்களைக் கைக்கொண்டு,
(பகைவரைச்)சேர்ந்தாருடைய வலியைப் போக்குதலின்,
(நீ)சினந்த பகைவர் நின் சொற்படி நடப்ப,
அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து,                              190
அரசியலறம் வழுவாது அறவழியைக் காட்டி,
பெரியோர்கள் சொல்லிச் சென்ற பாதை வழியிலிருந்து விலகாமல்,
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி -
கீழ் அடிவானத்தில் தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல்       195
(கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் ஆக்கம் -
உயர்ந்த நிலையிலுள்ள தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும்,
பொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய்;
முழங்குகின்ற கடலை எல்லையாகவுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு
உயர்ந்த வானுலகத்துத் தேவரும் (பகைவராய்)வந்தாலும்,                                                                                   200
(அப்)பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்;
தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;                                                                                          205
அத்தன்மையுடையாய், உன்னோடு ஒப்பிட்டுக் கூறவல்லோன் எவன்?
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே,
கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம்,
கெடாமல் நிலைபெறுக உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் -
கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயும்,                                                                                      210
(உண்பதற்காகச்)செலவழித்துக் குன்றாத கொழுவிய தசையும்,
உண்டு குறையாத பலவாகிய சோறும்,
பருகிக் குறைவுபடாத மிக்க கள்ளும்,
தின்று தீராத (இன்னோரன்ன)வகைகளும், (இவை எப்பொழுதோ அன்றி)ஒவ்வொரு நாளும்,
நிலம் சுமக்கமாட்டாத நல்ல பல பொருள்திரள்களையும் உடைய,                                                                 215
பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில்,
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க,
பாணர்கள் மகிழும்படி யானைகள் பலவற்றையும் கொடுத்து,
தம்மைச்சேர்ந்தோர் மகிழ எயில்பொருள்கள் பலவற்றைச் செலுத்திக்கொடுத்து,                                     220
(பகைவர்)மறம் கலங்கும்படி அவரிடத்தே சென்று,
வாட்போரில் (அவரை)வருத்தி, அதன் முயற்சியைப் பாராட்டி,
(அன்றைக்)காலையில் வந்துகூடிய நல்ல பொருநற்குத்
தேருடன் குதிரைகளையும் கொடுத்து,
சூடுதலுற்ற ஒளிவிடும் வஞ்சியினையும்,                                                                                                                        225
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு,
கள்ளினையுடைய பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படியாக உண்டு,
(தமக்குப்)பணிந்தவரின் நாடுகள் தம் சொற்படி நடப்ப,
(தமக்குப்)பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள,                               230
பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில்
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப,
கேடு உண்டாகக் கடந்துசென்று, (அவர்தம் நாட்டில்)வேண்டிய இடத்தில் தங்கி,
பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,
கரையைப் பொருது முழங்கும் செறிதலையுடைய பெரிய கடலின்                           235
அலைகள் குவிக்கின்ற மணலினும் பலரே - (புகழோடு
அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை ஆண்டு, பின் இறந்துபோனோர்) -
எனவே, கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து,
இரவென்றும் பகலென்றும் அறிந்துகொள்ள இடமின்றி,
மேடு பள்ளங்கள் எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து,                                                                                      240
கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க,
மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க,
மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி,
சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
கீழ்க்கடலுக்குப் பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து                       245
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,
யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,
விளங்கும் மடுக்களிலும், இலைக்கு மேலே உயர்ந்த
முள்ளுடைய அடித்தண்டையுடைய ஒளிவிடும் தாமரைப்பூவினையும்,
தேன் கமழும் மணமிக்க நெய்தல் பூவினையும்,                                                                                                        250
வளவிய இதழ் விரிந்த நீலப்பூவினையும்,
மெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பல்பூவோடு,
வண்டுகள் தங்குதல் கொண்ட மணங்கமழும் பூக்களைக்கொண்ட பொய்கைகளிலும்,
கம்புட்கோழி (தன்)இனிய உறக்கம் கெட்டோட,
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,                               255
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்,
கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,
சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும்,                                                                                               260
தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்
வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய
துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்
விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள்
(தம்மிடத்து)தாழ வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட       265
அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும்
அகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க,
குருகுப்பறவைகள் ஒலியெழுப்ப, மனையிலுள்ள மரங்கள்தோறும்
மீனைச் செதுக்கி(வேண்டாதவற்றை)க் கழிக்கும் பாணர் குடியிருப்புடன்
மருதநிலம் ஒழுக்கம் அமைந்த குளிர்ந்த வயல்வெளிகள் சூழ்ந்த ஒருபகுதியும் -                     270
சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க,
கரிய தாளினையுடைய வரகின் கரிதாகிய கதிர் முற்றிக் காய்ந்துபோக,
ஆழமான குழிகளில் திருவினையுடைய மணிகள் விளங்க,
வளர்ந்த காட்டில் நல்ல பொன் மேலே பிறழ,
பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்                               275
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,
ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
நீலமணியை ஒத்த பசிய(கரும்பச்சை நிற) பயிர்களிடந்தோறும்
வெள்ளியின் நிறத்தை ஒத்த ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து,                                                                                        280
முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடன் முல்லையும் பரவ,
நீலமணியென்று மருளும் நெய்தல், மாறும்படி, விருப்பத்தையுடைய,
தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர,
வல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று
முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் -                        285
நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
குறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும்,
ஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,
இஞ்சியும், மஞ்சளும், பசுத்த மிளகுக்கொடியும், பிறவும்
பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கல்தரையில் குவிக்கப்பட்டு,                                                                      290
தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,
பன்மணி போன்ற பூவினையுடைய அவரையின் நிறமிக்க தளிரைத் தின்னும்
ஆமாவை ஓட்டுகின்ற கானவரின் ஆரவாரமும்,
குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்(விழுந்த)
கீழ்நோக்கிய பார்வையையுடைய ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும்,                                                 295
கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த)
நறிய பூவைப் பறிக்கும் ஆரவாரமும், கரிய நிறத்தையுடைய
பன்றியைக் கொல்லும் வலிமையினையுடைய புலியின் ஆரவாரத்தோடு, எல்லா ஆரவாரமும்
விளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலைச்சாரல்களில் எதிரொலிக்க
கரிய காலையுடைய குறிஞ்சியின் ஒழுக்கம் அமைந்த பக்கமலைகள் சூழ்ந்து,                                      300
பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்), ஒரு பக்கம் -
பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
(உணவின்றி)கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்த யானைகள் (வேறு)மேய் நிலங்களுக்குச் செல்ல,
மகிழ்ந்த இசைஞர்கள் (தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று,
முங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து,                                           305
அருவிகள் இல்லையான அழகில்லாத பெரிய மலையிடத்தில்,
வைக்கோலைக் கண்டாற் போன்று புல் உலர்ந்த அழகிய காட்டில்,
நிறைவினையுடைய சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்துகொள்கையினால்,
காற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய;
குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும்,                                            310
தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர்
வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க;
நிழல் தன் வடிவை இழத்தற்குக் காரணமான முதுவேனில் காலத்தையுடைய மலையிடத்து
பாலை ஒழுக்கம் அமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம் -
ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும்,                                                    315
அரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளைகளும்,
பரதர் கொண்டுவந்த பலவாய் வேறுபட்ட பண்டங்களும்,
கரிய கழியிடத்துப் பாத்தியில் விற்கும் தித்திப்புக்கூட்டிப் பொறித்த புளியோடே வெள்ளிய உப்பும்,
பரந்து உயர்ந்த கானலில் வலிமையான கையினையுடைய திமிலர்
கொழுவிய மீன்களை அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும்(ஏற்றப்பட்ட)    320
சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்கும் மாலுமிகள்
அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்
நாள்தோறும் வழிவழியாகச் சிறக்க,
நெய்தல் ஒழுக்கம் அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு, அங்கு                           325
ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற -
முழவு முழங்கும் அகன்ற ஊரில்,
விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும்,
துணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும்,
இனிய செருக்கினையுடைய புதுவருவாயினையுடைய குடித்திரளையும் உடைய அங்கே,                330
(புலவர்)பாடுதல் நிறைந்த நல்ல நாட்டிற்கு நடுவணதாய் -
முசுக்கலைகள் தாவுகின்ற உயர்ந்த மலையுச்சியில்,
மயில்கள் அகவும் நிறைந்த மரக்கிளைகளில்
மந்திகள் ஊசலாட, பெரிய வானில் உயர்ந்து
ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரங்கள் அடர்ந்த சோலையிலும்,                                 335
ஓடுகின்ற நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய
காடுகளும் சோலைகளும் சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும்,
தாதுக்கள் சூழ்ந்த கோங்கினையுடைய பூவும் (ஏனை)மலர்களும் பரந்து
மாலையைப் போன்று ஒழுகி ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய
விளங்குகின்ற அறலையுடைய வையையின் துறைகள்தோறும்                               340
பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த,
நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும் -
நிலத்தையும் (அதன்)வளத்தையும் கண்டு முடிவுபோகாத
விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்,                                                                            345
செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவர்களும்,
அதிக நாட்களாய் கறுவிக்கொண்டு இருக்கும் -- (தன்)வலிமையினால் வந்த --
தலைமைச்சிறப்புடைய யானையைக் கொல்லும் -- போர்த்தொழிலை உடைய, வேந்தரை,
இனிய ஓசையினையுடைய முரசம் (உழிஞைப் போர்க்கு)இடைநிலத்தே கிடக்கும்படி,
பலவாய்க் கிடந்த மாறுபாட்டினை அகற்றி, (பகைவர் அத்தனை)பேரின் முதுகைக் கண்டு,                                350
(கீழே)மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,
விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,
தொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,
நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருத்தப்பட்ட கதவினையும்,
முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,                                                                                          355
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்,
பலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்)
சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்
ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் -
பல வேறுபட்ட குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க,                                                                                              360
பெருமையையுடைய காற்று எடுத்த கடலொலி போல
முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,
குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு
மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தையும் உடைய,
ஓவியத்தில் கண்டாற்போன்ற இரண்டு பெரிய அங்காடித்தெருவின்கண்                        365
விழா நிகழ்த்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,
வேறுபட்ட பல பெயர்களையுடைய (உறுதி)நிறைந்த அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற
நாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய அலங்காரமான கொடியும்,
கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை)
புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து,    370
புகழை உண்டாக்கி எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும்,
கள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல
பலவாய் வேறுபட்ட திரண்ட கொடிகளோடு பெருங்கொடிகளும் நிலைபெற்று,
பெரிய மலையிடத்து அருவியைப் போன்று நெளிந்துஆட,
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,                                                                                       375
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, வெகுளி மிக்கு                      380
கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, பாகரைத் தூக்கி எறிந்து,
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;
அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு
ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும்           385
சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
(கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,
தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின                         390
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்
யானை போன்ற அச்சம்தரும் போக்கினையுடைய
கள்ளை உண்ட மறவரின் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்,
(இவ்வாறு தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால் -
இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின்  395
பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
பலவகையாக விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும்,
பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்,
அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடன்,                                         400
நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) ண்ணாம்பையுடையவரும்,
இரண்டு பக்கத்திலும் (படை)வந்த பகைப்புலத்தை ஒக்க,
இனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து,
ஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர்,
பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,                           405
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க -
கரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)
பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய,
நல்ல வனப்பினையுடைய, பழைமை மூத்த பெண்டிர் --
{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை                               410
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
சிவந்த நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்; மடப்பத்தையுடைய கண்ணோடே
(பார்ப்பவர்)வியந்து கலங்கும் மாமை நிறமுடையவரும்; கூர்மையான பற்களின்
ஒழுங்குபட்ட வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,
நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும்,                                                415
தொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்,
மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய
மயிலின் தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்)
(தம்மை)அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்
கல்லாத இளைஞருடன் சிரிப்பவராய் உண்டு துய்க்க,}                                                                                           420
-- புடைத்தல் அமைந்த அழகிய பலவகைப்பட்ட செப்புக்களில்,
விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை
கமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல -
முகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,
கரையை மோதி ஒலிக்கும் கடலைப் போல,                                                                                                 425
(வாங்குவோர்)எடுக்க எடுக்கக் குறையாது, (வணிகர்)கொணரக் கொணர நிறையாது,
தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,
ஆட்டங்கள் நிறைவுபெறும் விழாவின்போது (மக்கள்)ஆரவாரித்ததைப் போன்று,
மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில்
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் -                       430
வெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய
செவ்வானத்தை ஒத்த, சிவந்து நுண்ணிதான வடிவில்,
கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை,
பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி,
திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,                                                              435
கச்சம் இறுக்கித் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும்,
(உலகத்தார்)வலிமையைக் கடந்து (புகழோடு) திரியும் ஒப்பற்ற பெரிய வேப்பமாலையினையும்,
மாணிக்கம் ஒழுகினாற் போன்ற ஒளிரும் செங்கழுநீர் மாலையினையும்,
அழகு விளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து,
காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி,                                                                         440
காலாட்கள் (சூழ்ந்து)காக்க, காற்று என விரைந்து செல்லும்,
முகில்போன்று (வரையாமற்கொடுக்கும்)வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்திய செல்வர்
நாட்காலத்தே மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண - (ஏனைய)அணிகலன்களோடே
தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும் நெருப்பில்(இட்டு)
குற்றமற்று விளங்கிய அழகிய பொன்னாற் செய்த பளபளக்கும் அணிகலன்களையுடைய,              445
தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,
ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம்,
திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத்
தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்,                               450
ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும்
மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய -
நீரும் நிலனும் நெருப்பும் காற்றும்
திசைகளையுடைய வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,                                455
அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய
வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க -                                    460
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,                                                                                      465
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -
சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,
நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)  470
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் -
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய                  475
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்
இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,
வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,
(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும்,                                                                       480
நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,
குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி,                                                                 485
கண்பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி,
வியப்பமைந்த நறிய பூக்களையுடைய (அமண்)பள்ளியும் -
மலைகள் பலவும் திரண்டு பொலிவன (போலத்)தோன்ற;
அச்சத்தையும், வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி,
பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து,                                                       490
துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய்,
சிறந்த கொள்கைகள் (உடைய)அறங்கூறவையமும் -
நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய்,
யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,
அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று,                                                                                           495
நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,
பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும் -
அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து --                                     500
அருகருகேயமைந்த பலவான சிறுமலைகளைக் கண்டாற் போன்று
பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லங்களில்
பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,
மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு       505
-- சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும் -
மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய
பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,
தாம் மேலாய் விளங்கிய நாற்பெருங்குழுவும் -                                              510
சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,
சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,
பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும்,
செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,                                                                                   515
பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,
தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,                                         520
சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,
நான்காய் வேறுபட்ட தெருக்கள்தோறும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்றலைச் செய்ய
வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,
குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு                                            525
விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப - பலவுடன்,
சாறும், மணமும் (கொண்ட)பலாப்பழத்தின் சுளைகளையும்,
ஒன்றற்கொன்று வேறுபட்ட அழகிய மாவின் பழங்களையும்,
பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும், பழங்களையும்,
மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,                                                                                                                 530
மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,
அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,
புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,
கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற பதார்த்தங்களையும்,
இனிய (கற்கண்டுச்)சோறு தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண -                         535
வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த)
பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து
ஒல்லென முழங்குகின்ற ஓசையைப் போன்று, கல்லென
அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி               540
கரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து,
அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,
பல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போன்றது
அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம் -
ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்க, சினம் குறைந்து,                                                              545
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கீழ் வானத்தில்
(பதினாறு)நாள் முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால்,
பகலின் வடிவை ஒத்த இராக்காலம் வரும்படியும், (நெஞ்சால்)விரும்பினோரான --
காதல் (மிக்க தம்)இனிய துணைவரைக் கூடும்பொருட்டு, ஆராய்ந்த இதழ்களையுடைய         550
குளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்கள் துணையாக நிற்க, அணிகளை அணிந்து,
நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க,
கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க,
மெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணக்கின்ற (அகிற்)புகையை ஊட்ட,
-- பெண்டிரே விரும்பும் மான்பிணை(போலும்) நோக்கினையுடைய மகளிர்                     555
நீண்ட சுடர்(விடும்) விளக்கினை ஏற்றி, பெரிய ஊரின்
எல்லைக்குட்பட்ட இடமெல்லாம் (நயந்தோர்க்கு)நோயைச் செய்தலோடே புகுந்து
கல்லெனும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் நீங்க - நாணம் கொண்டு,
(இசை)ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை,
தாழ்ந்து (அதன்)அயலே (பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி கூட்டி),  560
(தம்மை)விரும்புகின்ற துணைவரை முயங்கி, அகன்ற விண்ணில் (சென்று)மணக்கும்படி,
நீர் திரண்டாற் போல (வெள்ளிய பூக்களால் புனைந்த)மாலைகளை கொண்டையில் சூடி,
அழகிய திரண்ட ஒளிரும் தொடிகள் பளபளக்கக் கையை வீசி நடந்து,
மொட்டுக்கள் மலரும் புதிய பூக்கள் தெருவெங்கும் கமழ,
பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பனைசெய்து,                         565
பெரிய பலவாகிய செங்கழுநீரில் சுரும்புகள் மொய்க்கும் பல பூக்களை,
(கையால்)மலரச்செய்து மோந்து பார்த்ததைப் போன்ற மிகுந்து மணக்கும் வாசனையுடன்,
மழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல (ஏனைப்)பூக்களையும் பரக்கச்சூடி,
நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் (தம் மார்பில்)வடுப்படும்படியாகத் தழுவி,
வஞ்சனையுடைய பொய்வார்த்தை பலவற்றைப் பேசி, (தம் மனத்து)எண்ணத்தை மறைத்து,             570
தொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த
இளவயதினராகிய பல செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,
(பூவின்)நுண்ணிய தாதை உண்டு, (பின்னர் தாதற்ற)வறிய பூவை விட்டுவிலகும்
மெல்லிய சிறகையுடைய வண்டுகளைப் போன்று, (தம்மை)நுகர்ந்தோரது
நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,                                                                                     575
பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,
வளவிய குடி(யிற் பிறந்த)செல்வரும், பிறமாந்தரும் பொருந்தியுள்ள,
(புதிய)மணம் நிகழ்ந்தமையால் உயர்ச்சிபெற்ற, இல்லுறை தெய்வங்களையுடைய நல்ல இல்லங்களில்,
ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர்
ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி,                                                            580
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,
யாமத்திற்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற
முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய                      585
குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரின் (அகத்தேயுள்ள)அரும்பொடு சேரக்கட்டின
நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய -
குழாம் கொண்ட அவுணர்களைக் கொன்றருளிய, பொன்னால் செய்த மாலையினையுடைய     590
திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,                                                                                                  
தோட்டி (வளைந்த வாள்)வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும்,
சாணைக்கல்லால் தழும்பேறின, போரைத் தாங்கும் பெரிய கையினையும்,
வீரத்தைத் (தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில்,
(அடி)மாறாமையாற்பட்ட (கொம்பு அழுந்தின)தழும்பினையுடைய நெற்றியினையுடையனவும்,       595
வண்டுகள் நிறைந்த போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய மறவர்கள்            
கடிய களிறுகளை (ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால், (அதனைக்)காணவந்தோர் இட்டுச்செய்த
நெடிய கரையாகிய கரிய இடமுடைய நிலத்தின்கண் பரல்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி,
கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய -
தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று,                                                                                                         600
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு,
வளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க -
வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,                                                                 605
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க - ஒருபக்கத்தே,                                     610
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - (முதல் யாமத்தில் மாலை 6 - 9) குடியிருப்புகள்தோறும் (நின்ற)     15
புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,
வேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து,
பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,
சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே
முற்பட்ட (முதல்)யாமம் நிகழ்ந்த பின்னர் - (இரண்டாம் யாமத்தில் - இரவு 9 - 12 நள்ளிரவு)     620
சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை வாங்கிப்
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து, மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒளிவிடும் அணிகலன்களையும் உடைய மகளிர் துயிலுதலைச் செய்ய,
நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும்,
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)                625
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
இனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க,
திருநாளின்கண் கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள,
ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல,
படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில - (மூன்றாம் யாமத்தில் நள்ளிரவு 12 - 3 காலை)       630
நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய,
கரிய பிடியின்கண் மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து,
கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய                                          635
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும்,
மிக்க கருமையான, நுணுக்கமான வேலைப்பாடு(கொண்ட), நுண்ணிய கருமணலின்
நிறத்தை வாங்கிப் புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்;
மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்;640
நிலத்தை அகழும் உளியினை உடையவராய்; பேரணிகலன்களை விரும்பிச் சுற்றித்திரியும்
காட்சியினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து,
வலிய களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,
துயில் கொள்ளாத கண்ணையுடையவராய்; அஞ்சாத கோட்பாட்டையுடையவராய்;
அறிந்தவர்கள் புகழும் ஆண்மையையுடையவராய்; பொருட்செறிவுடைய                       645
நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள)
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி
மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,                                                                                    
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,                                                   650
தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
முந்திய யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,
(நான்காம் யாமத்தில் - காலை 3  - 6)பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில்,    
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,                                                                         655
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,
தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதப்பண்ணை இசைக்க, பரிக்காரர்
கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான,                                                                                            
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,                              660
பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,
கள் விற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல, மகளிர்
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
(பொழுது)புலர்ந்து (கதிர்)விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே, விருப்பத்தால்
கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று                             665
ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து --
திண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகள்(திறக்கப்படுவதால்) கிரீச்சிட,
(கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய,
பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல,                                                                               670
வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப,
இமிழ்கின்ற முரசு ஒலிக்க, ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்க,
பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,
யானையங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு விருப்பத்தையுடைய
அன்னச்சேவல்களும் (தம் பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூவ,                                               675
பிடியைக் கூடின பெரிய யானைகள் முழங்க, மிக்க வலியுடைய
கூட்டில் உறைகின்ற (கரடி முதலிய)வலிய விலங்குகள் புலியுடன் முழங்க,
வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமுடைய முகிலினில்
மின்னுக்கொடி நுடங்கின தன்மையுடையவராய், மதுவை உண்டு,
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த          680
பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,
பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம் போல்,
அழகிய மென்மையான இளம்பாக்குக் காய் விழுந்து, (முத்தொழிந்த)பிறவும் (விழுந்து கிடப்ப),
கொண்டுவந்து இட்ட மணலையுடைய (அம்)முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப,
-- மெல்லிய பூவின் வாடல்களுடன் நல்ல பூண்களையும் கூட்டித்தள்ள                        685
இராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில்,
கருமை படர்ந்த பெரிய தோளையுடைய மழவரைக் கெடுத்து,
போர்க்களத்தின் நடுவழியில் (விட்டுப்போன)ஏந்தின கொம்பினையுடைய யானைகளும்,
பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும்,
வேலினை (ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி,                                                                  690
எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும்,
அகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும்,
நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி,
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்                         695
கங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல,
அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,
தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,
மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் -
மரக்கிளைகளில் ஒன்றுகூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற)                  700
ஒளிரும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில்,
ஒளியைச் சொரிந்து (உச்சிக்கு)ஏறிய பளீரிடும் கதிர்களையுடைய ஞாயிற்றின்
(மேற்கில் இறங்கிய பின்னர்)மென்மையாக ஒளிவிடும் கதிர்களின் இளவெயில் தோன்றினாற் போன்று
பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று,                                                                                        705
மயிலோடு ஒருதன்மைத்தாகிய மென்மையினையும், மாமரத்தின்
தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையராய், கூரிய எயிற்றினையும்
ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும்,
இறைத்தன்மையுள்ள (பொற்றாமரைக்)குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின்  710
தாது உண்டாகும் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும்,
ஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கி,
தூக்கு மாலைகளால் பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு -
நன்றாக அமைந்த உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து,
திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி, ஒளிவிடும்                                  715
ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில்,
வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்,
பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
வலி பொருந்தின பெரிய கையில் வீர வளையோடு விளக்கம் வர,                                                 720
சோறு (தன்னிடத்தே நன்றாக)அமையப்பெற்ற நீரை(- கஞ்சியை) உடைய துகிலை,
உடைக்கு மேலணியும் அணிகலன்கள் பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்தி,
(சிற்பத்துறை)வல்லோன் செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில்
முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி -
வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து,       725
(அப்)பகைவரை விரட்டிய போரை விரும்பும் படைத்தலைவர்
வாள் வெற்றியைப் பொருந்தின நின் முயற்சியின் வெற்றியை வாழ்த்திநிற்ப -
வில்லை (வலிக்கையினால் தன்னுள்ளே)அடக்கிக்கொண்ட அம்பின் விசையைத் தாங்கும் மார்பினையும்,
குதிரையைச் செலுத்தும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்;
கல் (தரையைப்)பொளிந்து பண்ணின ஒடுங்கிய (நீர்வரும்)வாயையுடைய கிடங்கினையுடைய   730
நல்ல கோட்டைமதிலில் சிரமப்பட்ட (மறச்)செல்வர்களைக் கொணர்மின்;
கொல்லும் (தன்மையுள்ள முரட்டுக்)காளையின் பதப்படுத்திய தோலை (மயிர்)சீவாமற் போர்த்த
பெரிய கண்ணையுடைய முரசம் விடாமல் ஒலிக்க,
நெருப்பு நிமிர்ந்து நின்றாற் போன்ற (பகைவர்)படைக்கு நடுவே (சென்று)
பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே கொன்று,                                                                                           735
சீரிய புண்ணால் வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;
குற்றம்தீர்ந்த உயர்வினையுடையோர்க்குக் கட்டப்பட்ட பொன்னாற்செய்த பூவினையுடைய தும்பையை
நீர் (யார்)என்னாது, (அவர் தகுதிக்கேற்பக் கொண்டாடும்)முறையினை உட்கொண்டு சூட்டி ஏவுதலால்
காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,
(பலவாய்ப்)பிரிந்து இணைந்த (பொருத்துவாய்கள் அற்ற பழைய)நிறம் கெட்ட கவசத்தோடே,         740
தேவருலகத்தை ஒத்த வளமுடைய நகர் (மேலும் வீரப்பொலிவாலே)விளங்க,
வலிய குறட்டை ஒத்த ஊன் கெட்ட மார்போடே
உயர்ந்த உதவியை மேலும் முயலுதல் உடையாரைக் கொணர்மின்;
உயரமான யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த,
(பூசி)உலர்ந்த சாந்தினையும், பலவகையாய்க் கலந்த பூக்களின் மாலையினையும்,                                 745
பெரிய செய்கைகளையும் உடைய ஆடவர்களைக் கொணர்மின்; (இத்தகைய)பிறரும்
எல்லாரும் வருக, ஏனோரையும் கொணர்மின்' என்று
வரைந்து கூறி, வாயிலில் தடுத்து நிறுத்தாமல் இருந்து,
பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக', என்று அழைத்து                750
(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,
களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்,
நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும்,                                              755
நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும்,
நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்
பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே,
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,                                                                                                      760
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு,                                                                            765
அரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி,
பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,
கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி,                                                                             770
பொய்யாக்கப்படாத நல்ல புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும்,
பெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப,
(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க,
பொன் அணிகலன்களையுடைய ஐம்பெரும் கேளிரும் உட்பட, (அவரால்)புகழப்பட்ட            775
மறம் மிக்க சிறப்பினையுடைய குறுநில மன்னராகிய
அவர்களும், மற்றோரும் நிறைந்து,
பொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த,
விளங்குகின்ற பூணினையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் எடுத்த
மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்                          780
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,
அறநெறியில் ஈட்டி நீ பெற்றுள்ள நல்ல பழவினைப் பயனை உடையவனாவாய்.

No comments:

Post a Comment