முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Thursday, March 19, 2015

முல்லைப்பாட்டு-சொற்பிரிப்பு மூலம்


முல்லைப்பாட்டு

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

 

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு                                    திரு 1,நெடு 1
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு                                     மது 629
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி               5                         
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை                                மது 243
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது                    10           நெடு 43
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்                                              பெரும் 152,244
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்                                             குறி 127
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய                                             நெடு 183
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர          15           நெடு 3
இன்னே வருகுவர் தாயர் என்போள்                                                நெடு 155
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்                                            20
பருவரல் எவ்வம் களை மாயோய் என                                             சிறு 39
காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து                               நெடு 156
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி                  25           பெரும் 112



வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ                                                  பெரும் 154
படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில்                                                 மது 311
கவலை முற்றம் காவல் நின்ற                                                      30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த                     மலை 438
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டென
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி                          35           மலை 327
கல்லா இளைஞர் கவளம் கைப்ப                                                             மது 659
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை                                  40           பெரும்119-121,பட்78-79
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து                                             பட் 78
வாங்கு வில் அரணம் அரணம் ஆக
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு
குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறு புறத்து         45           மது 210
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர்                                               பெரும் 71
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ                                    நெடு 42
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்                                 50
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெரு மூதாளர் ஏமம் சூழ
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்                      55
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து                             60           முல் 66
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்                                               பெரும் 61,நெடு 32    
புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல்
திரு மணி விளக்கம் காட்டி திண் அ¡ண்
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்                                   65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக                                                 முல் 60,பெரும் 69
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து                                மலை 129
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய                               70
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி                                             முல் 78
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து                              பெரும் 269
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை                                                   75
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல்
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி                                             முல் 71
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து                   80
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து                        குறி 169
பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல                                   85           நெடு 101,175
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அம் செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு 90
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர                                                       திரு 120
செறி இலை காயா அஞ்சனம் மலர
முறி இணர் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ                                   95           நெடு 5,6
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செம் நில பெரு வழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள                                மது 276,பட் 245
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் 100
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய                               பெரும் 351
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடும் தேர் பூண்ட மாவே

No comments:

Post a Comment