முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Friday, March 20, 2015

குறிஞ்சிப்பாட்டு-சொற்பிரிப்பு மூலம்


குறிஞ்சிப்பாட்டு
கபிலர்

 

அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்                                               5
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்                             10
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்                                                        15
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி                                                          20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று                                                   25



ஆனா சிறுமையள் இவளும் தேம்பும்
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன்
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்     30
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை                                  35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப                                                திரு305,மலை108,518
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல்
நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி
எல் பட வருதியர் என நீ விடுத்தலின்                                                    
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த                                       40
புலி அஞ்சு இதணம் ஏறி அவண
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி                                                                  
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து                                 45
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர
நிறை இரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு                                      
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி                                           50
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்தென
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெள் நீர்                                     
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி                                            55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி
நளி படு சிலம்பில் பாயம் பாடி                                                                             நெடு 100
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்                                   
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி                                                       60
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செம் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடுவேரி தேமா மணிச்சிகை                                                          
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்                                 65
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வால் பூ குடசம்
எருவை செருவிளை மணி பூ கருவிளை                                            
பயினி வானி பல் இணர் குரவம்
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா                                                            70
விரி மலர் ஆவிரை வேரல் சூரல்
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி
குருகிலை மருதம் விரி பூ கோங்கம்
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி                                                         
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம்                                             75           திரு 27
கரந்தை குளவி கடி கமழ் கலி மா
தில்லை பாலை கல் இவர் முல்லை
குல்லை பிடவம் சிறுமாரோடம்
வாழை வள்ளி நீள் நறு நெய்தல்                                                                
தாழை தளவம் முள் தாள் தாமரை                                                      80             திரு 73,சிறு 183
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங்குரலி
கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல்                                                             திரு 74,மது 250
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம்                                                                 85
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை
அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம்                                                                            
தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி                                                             90
நந்தி நறவம் நறும் புன்னாகம்
பாரம் பீரம் பைம் குருக்கத்தி
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
நரந்தம் நாகம் நல்லிருள்நாறி                                                                         
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்                                          95
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின்                                        
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி                                     100
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா
பை விரி அல்குல் கொய் தழை தைஇ
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல் இரு முச்சி கவின் பெற கட்டி                                                         
எரி அவிர் உருவின் அம் குழை செயலை                                           105
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்
தண் நறும் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா                                                             
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை                                       110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து                                                   குறி147,முல் 8
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய                                           
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி                                115
நலம் பெறு சென்னி நாமுற மிலைச்சி
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி                                                       நெடு 40
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ                                                       மது 700
ஒண் பூ பிண்டி ஒரு காது செரீஇ                                                                          திரு 31,207,மது 701
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி                120
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறும் தார் பூணொடு பொலிய
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின்                           
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி                                                   125
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின்                                                         மலை 59
பகை புறம்கண்ட பல் வேல் இளைஞரின்
உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்                             130
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்                                  
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து                               135
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி
மெல்லிய இனிய மேவர கிளந்து எம்                                                       
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி                                                   140
மட மதர் மழை கண் இளையீர் இறந்த
கெடுதியும் உடையேன் என்றனன் அதன் எதிர்
சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி                                               
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர் என                                                  145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்                                                          சிறு 36
கை கவர் நரம்பின் இம்மென இமிரும்                                                         குறி 110
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த                                            
தாது அவிழ் அலரி தா சினை பிளந்து
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி                                                      150
கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து எம்
சொல்லல் பாணி நின்றனனாக
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை                                                    
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து                                                   155
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு                                
உரவு சின முன்பால் உடல் சினம் செருக்கி
கணை விடு புடையூ கானம் கல்லென                                                     160      குறி 227-228
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர                                                         பெரும் 166
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு                                     
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர                                                         165      திரு 81
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி                          
சூருறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை                                                         170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது                                                           
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப                                                      175      திரு 245
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய                                         சிறு 69
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம்                                      திரு 237
நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை                                        
அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை                                            திரு 307
அஞ்சிலோதி அசையல் யாவதும்                                                                  180
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை                                                   
நாணும் உட்கும் நண்ணு வழி அடைதர
ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ                                                  185
ஆகம் அடைய முயங்கலின் அ வழி
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை
முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென                                     
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்                                  190
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்                                              
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரை அரமகளிரின் சாஅய் விழைதக                                                    195      மலை 294
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த                                      
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல்
உள்ள தன்மை உள்ளினன் கொண்டு                                                          200
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப                                                             பொரு 66
மலர திறந்த வாயில் பலர் உண                                                                 
பைம் நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில்                                                       மலை 176
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு                             205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை                                            
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி                                                 219
அம் தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்                                   
பூ மலி சோலை அ பகல் கழிப்பி
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி                                                        215
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர                                                   
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ                                           220
பாம்பு மணி உமிழ பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை                                      
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்                                                                       225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள் இனம் ஒலிப்ப                                                    
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ                                                   230
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
நாடு அறி நல் மணம் அயர்கம் சில் நாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் என                                          
ஈர நன் மொழி தீர கூறி                                                                                             சிறு 93
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து                                                   235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு
அன்றை அன்ன விருப்போடு என்றும்                                                      
இர வரல் மாலையனே வருதோறும்
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும்                                            240
நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும்
வேய் புரை மெல் தோள் இன் துயில் என்றும்
பெறாஅன் பெயரினும் முனியலுறாஅன்                                                 
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர்                                       245
மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண்                                   
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய்                                      250
நினைதொறும் கலுழுமால் இவளே கங்குல்
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்                                        
வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து
உருமும் சூரும் இரை தேர் அரவமும்                                                      255
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்                                             
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்                                                                260
குழு மலை விடரகம் உடையவால் எனவே
 

No comments:

Post a Comment