முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

பொருநராற்றுப்படை-சொற்பிரிப்பு மூலம்


பொருநராற்றுப்படை

முடத்தாமக்கண்ணியார்

 
           அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
            சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது            சிறு 9
           வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
           குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்              மலை 34
5        விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
            எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
           ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
           பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
           அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
10     துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
          எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி                 பெரும் 11
          அண்நா இல்லா அமைவரு வறு வாய்              பெரும் 10
           பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
           மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்            பெரும் 13,மலை 21
15    கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
          ஆய் தினை அரிசி அவையல் அன்ன
           வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
           கேள்வி போகிய நீள் விசி தொடையல்
          மணம் கமழ் மாதரை மண்ணீ அன்ன
20    அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி
          ஆறலை கள்வர் படை விட அருளின்
          மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை          மது 686
          வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
            சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி
25    அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல்


 
கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண்

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்

பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்

மயிர் குறை கருவி மாண் கடை அன்ன

30    பூ குழை ஊசல் பொறை சால் காதின்              பெரும் 161

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின்           நெடு 166

ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை

நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்

35    அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து

ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை

நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்

உண்டு என உணரா உயவும் நடுவின்

வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்

40    இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின்   சிறு 19

பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி             சிறு 17,மலை 42-43

அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்     மது 507

பரல் பகை உழந்த நோயொடு சிவணி

45    மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள்

நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்

பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி

பாடின பாணிக்கு ஏற்ப நாள்தொறும்

களிறு வழங்கு அதர கானத்து அல்கி

50    இலை இல் மராத்த எவ்வம் தாங்கி

வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்

காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை

பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்

முரசு முழங்கு தானை மூவரும் கூடி              பெரும் 33

55    அரசவை இருந்த தோற்றம் போல

பாடல் பற்றிய பயன் உடை எழாஅல்

கோடியர் தலைவ கொண்டது அறிந

அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே          மலை 65-66

60    போற்றி கேள்மதி புகழ் மேம்படுந

ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு       பெரும் 25

நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று

எழுமதி வாழி ஏழின் கிழவ

பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன்     பெரும் 20,மது 576

65    இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின்

நசையுநர் தடையா நன் பெரு வாயில்              சிறு 206

இசையேன் புக்கு என் இடும்பை தீர

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப

70    கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி

இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்

வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்

ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய        திரு281,பொரு152,சிறு 235,பெரு 464

கேளிர் போல கேள் கொளல் வேண்டி

75    வேளாண் வாயில் வேட்ப கூறி

கண்ணில் காண நண்ணு வழி இரீஇ

பருகு அன்ன அருகா நோக்கமோடு

உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ

ஈரும் பேனும் இருந்து இறைகூடி

80    வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த

துன்னல் சிதாஅர் துவர நீக்கி                பொரு 154,பெரும் 468

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து

அரவு உரி அன்ன அறுவை நல்கி

மழை என மருளும் மகிழ் செய் மாடத்து           மலை 484

85    இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்          திரு 259

போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்       மது 779

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர உண்டு பேர் அஞர் போக்கி

செருக்கொடு நின்ற காலை மற்று அவன்

90    திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது

அதன் பயம் எய்திய அளவை மான

ஆறு செல் வருத்தம் அகல நீக்கி

அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்

95    மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து

மாலை அன்னதோர் புன்மையும் காலை

கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்

கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப

வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப

100   கல்லா இளைஞர் சொல்லி காட்ட

கதுமென கரைந்து வம் என கூஉய்

அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்

பராஅரை வேவை பருகு என தண்டி

105   காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை

ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி

அவையவை முனிகுவம் எனினே சுவைய

வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ             பொரு 3

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்

110   ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க

மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்

அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை

முரவை போகிய முரியா அரிசி

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்

115   பரல் வறை கருனை காடியின் மிதப்ப

அயின்ற காலை பயின்று இனிது இருந்து

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே

எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி

உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்

120   செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய

செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என       மலை 567

மெல்லென கிளந்தனம் ஆக வல்லே

அகறிரோ எம் ஆயம் விட்டு என

சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு

125   துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு

பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என

தன் அறி அளவையின் தரத்தர யானும்

என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு

இன்மை தீர வந்தனென் வென் வேல்

130   உருவ பல் தேர் இளையோன் சிறுவன்

முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில்

தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி                பட் 227

எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப

135   பவ்வமீமிசை பகல் கதிர் பரப்பி

வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்

நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை

140   மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி

முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென

தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு

இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்

145   ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய

வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள்

கண் ஆர் கண்ணி கரிகால்வளவன்                 சிறு 65

தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி

150   தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும்

கையது கேளா அளவை ஒய்யென           திரு281,பொரு 73,சிறு 235,பெரு 464

பாசி வேரின் மாசொடு குறைந்த                   பெரும் 468

துன்னல் சிதாஅர் நீக்கி தூய                       பொரு 81,பெரும் 468

155   கொட்டை கரைய பட்டு உடை நல்கி

பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என

பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர

வைகல்வைகல் கை கவி பருகி

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை             பெரும் 481-482

160   சுரி இரும் பித்தை பொலிய சூட்டி

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை

வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய

கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர்            பெரும் 416,மது 752

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க

165   பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி               பெரும் 319-320,489

காலின் ஏழ் அடி பின் சென்று கோலின்

தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு

பேர் யாழ் முறையுளி கழிப்பி நீர் வாய்

தண் பணை தழீஇய தளரா இருக்கை               சிறு 78,பெரும் 242

170   நன் பல் ஊர நாட்டொடு நன் பல்

வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை

வெருவரு செலவின் வெகுளி வேழம்

தரவு இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை

பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென

175   செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து

நில்லா உலகத்து நிலைமை தூக்கி                 பெரும் 466

செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென

திரை பிறழிய இரும் பௌவத்து

கரை சூழ்ந்த அகன் கிடக்கை

180   மாமாவின் வயின்வயின் நெல்

தாழ் தாழை தண் தண்டலை

கூடு கெழீஇய குடி வயினான்

செம் சோற்ற பலி மாந்திய

கரும் காக்கை கவவு முனையின்

185   மனை நொச்சி நிழல் ஆங்கண்

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்

இளையோர் வண்டல் அயரவும் முதியோர்

அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்

முட காஞ்சி செம் மருதின்

190   மட கண்ண மயில் ஆல

பைம் பாகல் பழம் துணரிய

செம் சுளைய கனி மாந்தி

அறை கரும்பின் அரி நெல்லின்

இன களமர் இசை பெருக

195   வறள் அடும்பின் இவர் பகன்றை

தளிர் புன்கின் தாழ் காவின்

நனை ஞாழலொடு மரம் குழீஇய

அவண் முனையின் அகன்று மாறி

அவிழ் தளவின் அகன் தோன்றி

200   நகு முல்லை உகு தேறு வீ

பொன் கொன்றை மணி காயா

நல் புறவின் நடை முனையின்

சுற வழங்கும் இரும் பௌவத்து

இறவு அருந்திய இன நாரை

205   பூ புன்னை சினை சேப்பின்

ஓங்கு திரை ஒலி வெரீஇ

தீம் பெண்ணை மடல் சேப்பவும்

கோள் தெங்கின் குலை வாழை

கொழும் காந்தள் மலர் நாகத்து

210   துடி குடிஞை குடி பாக்கத்து                       மலை 141

யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப

கலவம் விரித்த மடம் மஞ்ஞை

நிலவு எக்கர் பல பெயர

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்

215   மீன் நெய்யொடு நறவு மறுகவும்

தீம் கரும்போடு அவல் வகுத்தோர்

மான் குறையொடு மது மறுகவும்

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

நறும் பூ கண்ணி குறவர் சூட

220   கானவர் மருதம் பாட அகவர்

நீல் நிறம் முல்லை பல் திணை நுவல

கானக்கோழி கதிர் குத்த

மனை கோழி தினை கவர

வரை மந்தி கழி மூழ்க

225   கழி நாரை வரை இறுப்ப

தண் வைப்பின் நால் நாடு குழீஇ

மண் மருங்கினான் மறு இன்றி

ஒரு குடையான் ஒன்று கூற

பெரிது ஆண்ட பெரும் கேண்மை

230   அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்

அன்னோன் வாழி வென் வேல் குரிசில்

மன்னர் நடுங்க தோன்றி பல் மாண்

எல்லை தருநன் பல் கதிர் பரப்பி

குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்

235   அருவி மா மலை நிழத்தவும் மற்று அ

கருவி வானம் கடல் கோள் மறப்பவும்

பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்              சிறு 116

துறைதுறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி

240   நுரை தலை குரை புனல் வரைப்பகம் புகுதொறும்

புனல் ஆடு மகளிர் கதுமென குடைய

கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து

சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்

குன்று என குவைஇய குன்றா குப்பை              பெரும் 240-241

245   கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும்

சாலி நெல்லின் சிறை கொள் வேலி

ஆயிரம் விளையுட்டு ஆக

காவிரி புரக்கும் நாடு கிழவோனே

 

No comments:

Post a Comment