பொருநராற்றுப்படை
முடத்தாமக்கண்ணியார்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது சிறு 9
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் மலை 34
5 விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
10 துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி பெரும் 11
அண்நா இல்லா அமைவரு வறு வாய் பெரும் 10
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் பெரும் 13,மலை 21
15 கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணீ அன்ன
20 அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை மது 686
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி
25 அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல்
கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண்
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
30 பூ குழை ஊசல் பொறை சால் காதின் பெரும் 161
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் நெடு
166
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்
35 அணங்கு என உருத்த சுணங்கு அணி
ஆகத்து
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டு என உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்
40 இரும் பிடி தட கையின் செறிந்து
திரள் குறங்கின் சிறு 19
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி சிறு 17,மலை 42-43
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் மது 507
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
45 மரல் பழுத்து அன்ன மறுகு நீர்
மொக்குள்
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாள்தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி
50 இலை இல் மராத்த எவ்வம் தாங்கி
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி பெரும் 33
55 அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயன் உடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே மலை
65-66
60 போற்றி கேள்மதி புகழ் மேம்படுந
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு பெரும்
25
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ
பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் பெரும் 20,மது 576
65 இழுமென் சும்மை இடன் உடை
வரைப்பின்
நசையுநர் தடையா நன் பெரு வாயில் சிறு 206
இசையேன் புக்கு என் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
70 கை கசடு இருந்த என் கண் அகன்
தடாரி
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய திரு281,பொரு152,சிறு 235,பெரு 464
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
75 வேளாண் வாயில் வேட்ப கூறி
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ
ஈரும் பேனும் இருந்து இறைகூடி
80 வேரொடு நனைந்து வேற்று இழை
நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி பொரு 154,பெரும் 468
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து மலை 484
85 இழை அணி வனப்பின் இன் நகை
மகளிர் திரு 259
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால் மது
779
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
90 திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
95 மனம் கவல்பு இன்றி மாழாந்து
எழுந்து
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப
100 கல்லா இளைஞர் சொல்லி காட்ட
கதுமென கரைந்து வம் என கூஉய்
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி
105 காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை
ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி
அவையவை முனிகுவம் எனினே சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ பொரு 3
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
110 ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
115 பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை பயின்று இனிது இருந்து
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்
120 செயிர்த்து எழு தெவ்வர் திறை
துறைபோகிய
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என மலை
567
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு
125 துடி அடி அன்ன தூங்கு நடை
குழவியொடு
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என
தன் அறி அளவையின் தரத்தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் வென் வேல்
130 உருவ பல் தேர் இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில்
தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி பட் 227
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப
135 பவ்வமீமிசை பகல் கதிர் பரப்பி
வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை
140 மீளி மொய்ம்பின் மிகு வலி
செருக்கி
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு
இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்
145 ஓங்கு இரும் சென்னி மேம்பட
மிலைந்த
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள்
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் சிறு 65
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி
150 தொழுது முன் நிற்குவிர் ஆயின்
பழுது இன்று
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும்
கையது கேளா அளவை ஒய்யென திரு281,பொரு 73,சிறு 235,பெரு 464
பாசி வேரின் மாசொடு குறைந்த பெரும் 468
துன்னல் சிதாஅர் நீக்கி தூய பொரு 81,பெரும் 468
155 கொட்டை கரைய பட்டு உடை நல்கி
பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல்வைகல் கை கவி பருகி
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை பெரும் 481-482
160 சுரி இரும் பித்தை பொலிய சூட்டி
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர் பெரும்
416,மது 752
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க
165 பால் புரை புரவி நால்கு உடன்
பூட்டி பெரும் 319-320,489
காலின் ஏழ் அடி பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
பேர் யாழ் முறையுளி கழிப்பி நீர் வாய்
தண் பணை தழீஇய தளரா இருக்கை சிறு 78,பெரும் 242
170 நன் பல் ஊர நாட்டொடு நன் பல்
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
175 செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல
புலந்து
நில்லா உலகத்து நிலைமை தூக்கி பெரும் 466
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென
திரை பிறழிய இரும் பௌவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
180 மாமாவின் வயின்வயின் நெல்
தாழ் தாழை தண் தண்டலை
கூடு கெழீஇய குடி வயினான்
செம் சோற்ற பலி மாந்திய
கரும் காக்கை கவவு முனையின்
185 மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்டல் அயரவும் முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்
முட காஞ்சி செம் மருதின்
190 மட கண்ண மயில் ஆல
பைம் பாகல் பழம் துணரிய
செம் சுளைய கனி மாந்தி
அறை கரும்பின் அரி நெல்லின்
இன களமர் இசை பெருக
195 வறள் அடும்பின் இவர் பகன்றை
தளிர் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின் அகன்று மாறி
அவிழ் தளவின் அகன் தோன்றி
200 நகு முல்லை உகு தேறு வீ
பொன் கொன்றை மணி காயா
நல் புறவின் நடை முனையின்
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை
205 பூ புன்னை சினை சேப்பின்
ஓங்கு திரை ஒலி வெரீஇ
தீம் பெண்ணை மடல் சேப்பவும்
கோள் தெங்கின் குலை வாழை
கொழும் காந்தள் மலர் நாகத்து
210 துடி குடிஞை குடி பாக்கத்து மலை 141
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப
கலவம் விரித்த மடம் மஞ்ஞை
நிலவு எக்கர் பல பெயர
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
215 மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
220 கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிறம் முல்லை பல் திணை நுவல
கானக்கோழி கதிர் குத்த
மனை கோழி தினை கவர
வரை மந்தி கழி மூழ்க
225 கழி நாரை வரை இறுப்ப
தண் வைப்பின் நால் நாடு குழீஇ
மண் மருங்கினான் மறு இன்றி
ஒரு குடையான் ஒன்று கூற
பெரிது ஆண்ட பெரும் கேண்மை
230 அறனொடு புணர்ந்த திறன் அறி
செங்கோல்
அன்னோன் வாழி வென் வேல் குரிசில்
மன்னர் நடுங்க தோன்றி பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
235 அருவி மா மலை நிழத்தவும் மற்று அ
கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் சிறு 116
துறைதுறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி
240 நுரை தலை குரை புனல் வரைப்பகம்
புகுதொறும்
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை பெரும் 240-241
245 கடும் தெற்று மூடையின் இடம் கெட
கிடக்கும்
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே
No comments:
Post a Comment