முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

சிறுபாணாற்றுப்படை-சொற்பிரிப்பு மூலம்


சிறுபாணாற்றுப்படை
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

 

மணி மலை பணை தோள் மா நில மடந்தை
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புது பூ செம்மல் சூடி புடை நெறித்து                5
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து                        மலை 373
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப
வேனில் நின்ற வெம் பத வழி நாள்                                பொரு 2
காலை ஞாயிற்று கதிர் கடாவுறுப்ப                 10
பாலை நின்ற பாலை நெடு வழி
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என                        மலை 44
மணி வயின் கலாபம் பரப்பி பல உடன்             15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ                           பொரு 42,மலை42-43
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்                      திரு 158,பொரு 40
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என 20          
மால் வரை ஒழுகிய வாழை வாழை
பூ என பொலிந்த ஓதி ஓதி
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி             25           திரு 34-35



பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல் இயல்              30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்ல தைவர
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்                        சிறு 227,பெரும் 15
இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ              35
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை                              குறி 146
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல            40           திரு 284,பட் 214,253
கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர           45          
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் 50           சிறு 112
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து                      சிறு 108
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பின்
செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி              55
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                         பெரும் 63
மகாஅர் அன்ன மந்தி மடவோர் 
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்           60          
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான்
தென் புல காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை          65
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன்                             பொரு 148
தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின்                             சிறு 127
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை             70          
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வரு முலை அன்ன வண் முகை உடைந்து
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன         75
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை                              பொரு169,பெரும் 242
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்               80
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை
நாடா நல் இசை நல் தேர் செம்பியன்
ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று                      திரு 247
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன்             85
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய           90
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி
வால் உளை புரவியொடு வையகம் மருள
ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்  95           சிறு 102
கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த                       திரு 256
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நல் மொழி ஆயும் மால் வரை              100
கமழ் பூ சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்                        சிறு 94
அரவம் கடல் தானை அதிகனும் கரவாது
நட்டோர் உவப்ப நடை பரிகாரம்                               105
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து                           சிறு 51
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த         110
காரி குதிரை காரியொடு மலைந்த
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்                           சிறு 49
எழுவர் பூண்ட ஈகை செம் நுகம்
விரி கடல் வேலி வியலகம் விளங்க                   115
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள்
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்                                 பொரு 238
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொல் மா இலங்கை கருவொடு பெயரிய           120
நன் மா இலங்கை மன்னருள்ளும்
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை          125
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு                          சிறு 268
தாங்க அரு மரபின் தன்னும் தந்தை                                சிறு 66
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன் நாள் சென்றனம் ஆக இ நாள்                130
திறவா கண்ண சாய் செவி குருளை
கறவா பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி                                     135
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்    140
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள்
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி                         பெரும் 27,மது 224
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்                               பெரும்28,மலை53
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்          145
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்                           திரு 62
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்          150
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய                               மது 351,மலை 250
பனி நீர் படுவின் பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன        155
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப                          160
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்
தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்
பை நனை அவரை பவழம் கோப்பவும்             165
கரு நனை காயா கண மயில் அவிழவும்
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்                   மலை 101
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும்
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லை அம் புறவின்           170
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி                                 பெரும் 291
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை   175
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு                            மலை 179
தேமா மேனி சில் வளை ஆயமொடு  
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர்
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி                      180
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்                        பெரும் 313
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது             திரு 73,பெரும் 114,மது 249
கொங்கு கவர் நீல செம் கண் சேவல்               185
மதி சேர் அரவின் மான தோன்றும்
மருதம் சான்ற மருத தண் பணை
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர்
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்           190
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து
தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப                               பெரும் 478,மலை 185
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு       195
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள்    200
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்         205
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி                       பொரு 66
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த        210
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும்
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த
கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும்         215
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த
பல் மீன் நடுவண் பால் மதி போல                            220                   மது 769
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி
பை கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து       225
கானம் குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்                  சிறு 34
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக            230
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்           235
நீ சில மொழியா அளவை மாசு இல்                                      திரு 281,பொரு 73,152,பெரு 464
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி
கா எரியூட்டிய கவர் கணை தூணி
பூ விரி கச்சை புகழோன் தன்முன்                   240
பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி       245
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி                               பெரும் 479
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு              250
பருவ வானத்து பால் கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்ட ஆங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை   255
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை
கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்     260  
வாண் முகம் பாண்டில் வலவனொடு தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி           265
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு
எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி
குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே              270            சிறு 12

No comments:

Post a Comment