முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.
Showing posts with label பத்துப்பாட்டு-சொற்பிரிப்பு மூலம். Show all posts
Showing posts with label பத்துப்பாட்டு-சொற்பிரிப்பு மூலம். Show all posts

Friday, March 20, 2015

மலைபடுகடாம்-சொற்பிரிப்பு மூலம்


மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

  

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்                                     மலை233,திரு9,திரு116,பெரும்135,மது 581
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து                          திரு 121,மது 560,குறி 49
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்                                      நெடு 175
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு                                     5         
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்                             மலை 533
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை                                மது 612
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி                                        10
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப                                     மலை 143
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்                                                   மலை 365,515
கடு கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்                                      15           மது 278
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்                            பெரும் 39-41
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி                                      20
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்                                    பெரும் 14,15
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா                                               பொரு 18
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்                                          திரு 140
அரலை தீர உரீஇ வரகின்                              
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ                                        25           பெரும் 8

பட்டினப்பாலை-சொற்பிரிப்பு மூலம்


பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்                   
திசை திரிந்து தெற்கு ஏகினும்                                    மது 108            
தன் பாடிய தளி உணவின்                        
புள் தேம்ப புயல் மாறி                            
வான் பொய்ப்பினும் தான் பொய்யா                                            5   
மலை தலைய கடல் காவிரி                      
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி                                                                    10
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழு குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்                                                              15
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து                                                              20
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்                                 பட் 295
மு கால் சிறு தேர் முன் வழி விலக்கும்                                  25    பெரும் 249

குறிஞ்சிப்பாட்டு-சொற்பிரிப்பு மூலம்


குறிஞ்சிப்பாட்டு
கபிலர்

 

அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்                                               5
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்                             10
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்                                                        15
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி                                                          20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று                                                   25

Thursday, March 19, 2015

நெடுநல்வாடை-சொற்பிரிப்பு மூலம்


நெடுநல்வாடை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ                                                    திரு 1,முல் 1
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்                                      முல் 15
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி                                               மலை 408       
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல்                               5
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை                                                          10
கன்று கோள் ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ                                            மலை 101
பொன் போல் பீரமொடு புதல்புதல் மலர
பை கால் கொக்கின் மென் பறை தொழுதி                            15
இரும் களி பரந்த ஈர வெண் மணல்
செம் வரி நாரையோடு எ வாயும் கவர
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை                                     முல் 100
அகல் இரு விசும்பில் துவலை கற்ப                                       20                       பெரும் 1
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க                                             பெரும் 353
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு                                    25

மதுரைக் காஞ்சி-சொற்பிரிப்பு மூலம்


மதுரைக்காஞ்சி
மாங்குடி மருதனார்
 

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப                                                      5
வியல் நாள்மீன் நெறி ஒழுக
பகல் செய்யும் செம் ஞாயிறும்
இரவு செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க                              10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய                                     பொரு 247,மலை 98
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
நோய் இகந்து நோக்கு விளங்க
மே தக மிக பொலிந்த
ஓங்கு நிலை வய களிறு                                                                     15
கண்டு தண்டா கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகு வளத்தான்
உயர் பூரிம விழு தெருவில்
பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு                                                     20
நல் ஊழி அடி படர                                                                                        மது 782
பல் வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்மகளிர்                                                   25           திரு 56


முல்லைப்பாட்டு-சொற்பிரிப்பு மூலம்


முல்லைப்பாட்டு

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

 

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு                                    திரு 1,நெடு 1
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு                                     மது 629
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி               5                         
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை                                மது 243
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது                    10           நெடு 43
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்                                              பெரும் 152,244
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்                                             குறி 127
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய                                             நெடு 183
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர          15           நெடு 3
இன்னே வருகுவர் தாயர் என்போள்                                                நெடு 155
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்                                            20
பருவரல் எவ்வம் களை மாயோய் என                                             சிறு 39
காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து                               நெடு 156
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி                  25           பெரும் 112