முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

திருமுருகாற்றுப்படை-சொற்பிரிப்பு மூலம்


திருமுருகாற்றுப்படை

நக்கீரர்

 

 
            உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு                                                 நெடு 1,முல் 1,பட் 67
             பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு
            ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
            உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்
5           செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை                                      திரு 99
            மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
            கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
            வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
10       தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து
           இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
           உருள் பூ தண் தார் புரளும் மார்பினன்
           மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்                                  திரு 256,பெரும் 330
          கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
15      கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள்
          கோபத்து அன்ன தோயா பூ துகில்
           பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
          கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
          நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
20    சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
         துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி
         செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு
         பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி
         தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
         திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
25     மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து



துவர முடித்த துகள் அறும் முச்சி

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி                                                 திரு 34

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு

30           இணைப்புறு பிணையல் வளைஇ துணை தக                      திரு 200,237

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்                                     திரு 207,குறி 119

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்                                 திரு 28

35           குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர்                      சிறு 25

வேங்கை நுண் தாது அப்பி காண்வர

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி                                 திரு 55

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்

40           சீர் திகழ் சிலம்பகம் சிலம்ப பாடி

சூர் அரமகளிர் ஆடும் சோலை

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து                                  மலை 315

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்                                                     மலை 145

பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

45           பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்                                  பெரும் 457

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க

50           பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர

55           வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா                    திரு 38

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க                                      பெரும் 235

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்

60           மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து

எய்யா நல் இசை செ வேல் சேஎய்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு                                      சிறு 145

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்

65           நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி

வரி புனை பந்தொடு பாவை தூங்க

பொருநர் தேய்த்த போர் அரு வாயில்

70           திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின்                                    மது 429,நெடு 29

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை                       சிறு 183,பெரும் 114,மது 249

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட

75           கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர

80           படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு                       திரு 170

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி

85           மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை

சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ

அகலா மீனின் அவிர்வன இமைப்ப

தா இல் கொள்கை தம் தொழில் முடிமார்                                  திரு 175

90           மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க

பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்

95           மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம்

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி                                     திரு 5

100        கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம்

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

105        செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை

110        அங்குசம் கடாவ ஒரு கை இரு கை

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை

மார்பொடு விளங்க ஒரு கை

தாரொடு பொலிய ஒரு கை

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை

115        பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை   பெரும் 135,மது 581,மலை 1

வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட

ஆங்கு அ பன்னிரு கையும் பால் பட இயற்றி

அந்தர பல் இயம் கறங்க திண் காழ்

120        வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல                                 முல் 92

உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு                     குறி 49,மலை2-3,532

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்

125        அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வால் நரை முடியினர்

மாசு அற இமைக்கும் உருவினர் மானின்                                   மது 456

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்

130        என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல்

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு

135        கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை

யாவதும் அறியா இயல்பினர் மேவர

துனி இல் காட்சி முனிவர் முன் புக

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை                                  பெரும் 469

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து

140        செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

145        பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்

150        பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்

155        நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்

வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து

ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை                                     சிறு 19

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்

160        நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக

ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி

தாமரை பயந்த தா இல் ஊழி                                                       பெரும் 404

165        நான்முக ஒருவர் சுட்டி காண்வர

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி

நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு                                   பெரும் 477

170        வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை                      திரு 82

தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட

உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்

அந்தர கொட்பினர் வந்து உடன் காண

175        தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்                      திரு 89

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி

அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு

180        ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை

மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்

புலரா காழகம் புலர உடீஇ

185        உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி

நா இயல் மருங்கில் நவில பாடி

விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து                                  திரு 235

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று

190        பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்                                      பட் 85

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்

195        நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்                                     மலை 171,522

குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து

தொண்டக சிறுபறை குரவை அயர

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி

200        இணைத்த கோதை அணைத்த கூந்தல்                                     திரு 30

முடித்த குல்லை இலை உடை நறும் பூ

செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை

திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ

205        மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு                       பெரும் 331,மது 608

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்                                 திரு 31,குறி 119

கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்

210        தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்

கொடியன் நெடியன் தொடி அணி தோளன்

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு

குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்

215        முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று

சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து

வாரண கொடியொடு வயின் பட நிறீஇ

220        ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும்

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

வேலன் தைஇய வெறி அயர் களனும்

காடும் காவும் கவின் பெறு துருத்தியும்

யாறும் குளனும் வேறு பல் வைப்பும்

225        சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து                                     நெடு 86

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி

230        முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ

செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி                                    திரு 242

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ

235        சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து                                  திரு 188

பெரும் தண் கணவீர நறும் தண் மாலை

துணையுற அறுத்து தூங்க நாற்றி                                                   திரு 30,குறி 177

நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி

240        இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க

உருவ பல் பூ தூஉய் வெருவர

குருதி செம் தினை பரப்பி குறமகள்                                                 திரு 233

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்

245        ஆடுகளம் சிலம்ப பாடி பல உடன்

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி                                                  சிறு 83

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே

250        ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக

முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி

கை தொழூஉ பரவி கால் உற வணங்கி                                    பெரும் 463

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

255        அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ

ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை                                    திரு 12,சிறு 97

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி                                  பொரு 85

260        வானோர் வணங்கு வில் தானை தலைவ

மாலை மார்ப நூல் அறி புலவ

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை

மங்கையர் கணவ மைந்தர் ஏறே

265        வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ

குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ                                    திரு 299

பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறே

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக                                       முரு 274

270        நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து

பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்                                  திரு 269

275        சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி

போர் மிகு பொருந குருசில் என பல

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு

280        புரையுநர் இல்லா புலமையோய் என

குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்                 பொரு 73,பொரு 152,சிறு 235,பெரு 464

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி

அளியன்தானே முது வாய் இரவலன்                                       சிறு 40

285        வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என                     பெரும் 461

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி

அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன்

290        மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி

அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என

அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து

ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய

295        பெறல் அரும் பரிசில் நல்குமதி பல உடன்

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து

ஆர முழு முதல் உருட்டி வேரல்

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த                      திரு 267

300        தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல

ஆசினி முது சுளை கலாவ மீமிசை

நாக நறு மலர் உதிர யூகமொடு

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல்

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று

305        முத்து உடை வான் கோடு தழீஇ தத்துற்று

நல் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா

வாழை முழு முதல் துமிய தாழை

இளநீர் விழு குலை உதிர தாக்கி

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற

310        மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ

கோழி வய பெடை இரிய கேழலொடு

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்                                  மலை 501

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு

315        ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று

இழுமென இழிதரும் அருவி

பழம் முதிர் சோலை மலை கிழவோனே

No comments:

Post a Comment