சிறுபாணாற்றுப்படை
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
மணிமலைப் பணைத்தோண்
மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ
மாரம் போலச்செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
5 புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
10 காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
15 மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
20 சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென
மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி யோதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
25 தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்
பூணகத் தொடுங்கிய
வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை
வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு
மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற்
குவிமுகை யவிழ்ந்த
30 முல்லை சான்ற கற்பின்
மெல்லியன்
மடமா னோக்கின்
வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய
நன்மென் சீறடி
கல்லா விளையர்
மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன
புரியடங்கு நரம்பி
35 னின்குரற் சீரியா
ழிடவயிற் றழீஇ
நைவளம் பழுநிய
நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன்
கடனரிந் தியக்க
வியங்கா வையத்து
வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு
துயராற்றுப் படுப்ப
40 முனிவிகந் திருந்த
முதுவா யிரவல
கொழுமீன் குறைய
வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா
யெருமை
பைங்கறி நிவந்த பலவி
னீழன்
மஞ்சண் மெல்லிலை
மயிர்ப்புறந் தைவர
45 விளையா விளங்க ணாற
மெல்குபு பெயெராக்
குளவிப் பள்ளிப்
பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர்
மருமா னொன்னார்
வடபுல விமயத்து
வாங்குவிற் பொறித்த
வெழுவுறழ் திணிதோ
ளியறேர்க் குட்டுவன்
50 வருபுனல் வாயில்
வஞ்சியும் வறிதே யதாஅன்று
நறவுவா யுறைக்கு
நாகுமுதிர் நுணவத்
தறைவாய்க் குறுந்துணி
யயிலுளி பொருத
கைபுனை செப்பங்
கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி
செவிமுத றிருத்தி
55 நோன்பகட் டுமண
ரொழுகையொடு வந்த
மகாஅ ரன்ன மந்தி
மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர்
முத்தம்
வாள்வா யெருந்தின்
வயிற்றகத் தடக்கித்
தோள்புர மறைக்கு
நல்கூர் நுசுப்பி
60 னுளரிய லைம்பா லுமட்டிய
ரீன்ற
கிளர்பூட் புதல்வரொடு
கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற்
கொற்கைக் கோமான்
றென்புலங் காவலர்
மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை
வெண்குடைக்
65 கண்ணார் கண்ணிக்
கடுந்தேர்ச் செழியன்
றமிழ்நிலை பெற்ற
தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின்
மதுரையும் வறிதே யதாஅன்று
நறுநீர்ப் பொய்கை
யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின்
றுணையார் கோதை
70 யோவத் தன்ன வுண்டுறை
மருங்கிற்
கோவத் தன்ன
கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை
யுடைந்து
திருமுக மவிழ்ந்த
தெய்வத் தாமரை
யாசி லங்கை
யரக்குத்தோய்ந் தன்ன
75 சேயிதழ் பொதிந்த
செம்பொற் கொட்டை
யேம வின்றுணை தழீஇ
யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ்
செப்புந்
தண்பணை தழீஇய தளரா
விருக்கைக்
குணபுலங் காவலர்
மருமா னொன்னா
80 ரோங்கெயிற் கதவ
முருமுச்சுவல் சொறியுந்
தூங்கெயி லெறிந்த
தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை
நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை
யுறந்தையும் வறிதே யதாஅன்று
வானம் வாய்த்த
வளமலைக் கவாஅற்
85 கான மஞ்ஞைக்குக்
கலிங்க நல்கிய
வருந்திற லணங்கி
னாவியர் பெருமகன்
பெருங்க னாடன்
பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக
நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப்
பெருந்தேர் நல்கிய
90 பிறங்குவெள் ளருவி
வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான்
பாரியுங் கறங்குமணி
வாலுளைப் புரவியொடு
வையக மருள
வீர நன்மொழி
யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு
மஞ்சுவரு நெடுவேற்
95 கழறொடித் தடக்கைக்
காரியு நிழறிகழ்
நீல நாக நல்கிய
கலிங்க
மாலமர் செல்வற்
கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய
சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயு
மால்வரைக்
100 கமழ்பூஞ் சாரற்
கவினிய நெல்லி
யமிழ்துவிளை தீங்கனி
யௌவைக் கீந்த
வுரவுச்சினங் கனலு
மொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை
யதிகனுங் காவாது
நட்டோ ருவப்ப
நடைப்பரி கார
105 முட்டாது கொடுத்த
முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும்
வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு
நளிசினை
நறும்போது கஞலிய
நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு
கோடியர்க் கீந்த
110 காரிக் குதிரைக்
காரியொடு மலைந்த
வோரிக் குதிரை யோரியு
மெனவாங்
கெழுசமங் கடந்த
வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச்
செந்நுகம்
விரிகடல் வேலி
வியலகம் விளங்க
115 வொருதான் றாங்கிய
வுரனுடை நோன்றா
ணறுவீ நாகமு மகிலு
மாரமுந்
துறையொடு
மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம்
போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக்
கருவொடு பெயரிய
120 நன்மா விலங்கை மன்ன
ருள்ளு
மறுவின்றி விளங்கிய
வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி
னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும்
பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும்
பெயன்மழைத் தடக்கைப்
125 பல்லியக் கோடியர்
புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை நயந்த
கொள்கையொடு
தாங்கரு மரபிற்
றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை
வளனும் பாடி
முன்னாட் சென்றன மாக
விந்நா
130 டிறவாக் கண்ண
சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை
கவர்த னோனாது
புனிற்றுநாய்
குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க்
கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா
ளாம்பி
135 யொல்குபசி யுழந்த
வொடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள்
வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி
வெந்ததை
மடவோர் காட்சி நாணிக்
கடையடைத்
திரும்பே ரொக்கலொ
டொருங்குடன் மிசையு
140 மழிபசி வருத்தம்
வீடப் பொழிகவுட்
டறுகட் பூட்கைத்
தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு
பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருது
நீயிரு
மிவணயந் திருந்த
விரும்பே ரொக்கற்
145 செம்ம லுள்ளமொடு
செல்குவி ராயி
னலைநீர்த் தாழை
யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி
தமனிய மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங்
கதிர்மணி கழாஅலவு
நெடுங்காற் புன்னை
நித்திலம் வைப்பவுங்
150 கானல் வெண்மணல்
கடலுலாய் நிமிர்தரப்
பாடல் சான்ற நெய்த
னெடுவழி
மணிநீர் வைப்பு
மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற்
பட்டினம் படரி
னோங்குநிலை யொட்டகந்
துயின்மடிந் தன்ன
155 வீங்குதிரை கொணர்ந்த
விரைமர விறகிற்
கரும்புகைச் செந்தீ
மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉ மாசறு
திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக
ளரித்த
பழம்படு தேறல் பரதவர்
மடுப்பக்
160 கிளைமலர்ப் படப்பைக்
கிடங்கிற் கோமான்
றளையவிழ் தெரியற்
றகையோற் பாடி
யறற்குழற் பாணி
தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின்
வயின்வயிற் பெறுகுவிர்
பைந்நனை யவரை பவழங்
கோப்பவுங்
165 கருநனைக் காயாக்
கணமயி லவிழவுங்
கொழுங்கொடி முசுண்டை
கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள்
கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப
மூரவு
முல்லை சான்ற
முல்லையம் புறவின்
170 விடர்கா லருவி
வியன்மலை மூழ்கிச்
சுடர்கான் மாறிய
செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற்
பூத்த கேணி
விறல்வேல் வென்றி
வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய
வுருப்பவிர் குரம்பை
175 யெயிற்றிய ரட்ட
வின்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை
யாயமொ
டாமான் சூட்டி
னமைவரப் பறுகுவிர்
நறும்பூங் கோதை
தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக்
கொம்ப ரேறி
180 நிலையருங் குட்ட
நோக்கி நெடிதிருந்து
புலவுக்கய லெடுத்த
பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த
வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை
முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச்
செங்கட் சேவன்
185 மதிசே ரரவின் மானத்
தோன்று
மருதஞ் சான்ற மருதத்
தண்பணை
யந்தண ரருகா வருங்கடி
வியனக
ரந்தண் கிடங்கினவ
னாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும்
வலிபுண ரெருத்தி
190 னுரன்கெழு நோன்பகட்
டுழவர் தங்கை
பிடிக்கை யன்ன
பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ
மகமுறை தடுப்ப
விருங்கா ழுலக்கை
யிரும்புமுகந் தேய்த்த
வவைப்புமா ணரிசி
யமலைவெண் சோறு
195 கவைத்தா ளலவன்
கலவையொடு பெறுகுவி
ரெரிமறிந் தன்ன நாவி
னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற்
கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம்
போலப்
பிணனுகைத்துச் சிவந்த
பேருகிர்ப் பணைத்தா
200 ளண்ணல் யானை யருவிதுக
ளவிப்ப
நீறடங்கு தெருவினவன்
சாறயர் மூதூர்
சேய்த்து மன்று
சிறிதுநணி யதுவே
பொருநர்க் காயினும்
புலவர்க் காயினு
மருமறை நாவி
னந்தணர்க் காயினுங்
205 கடவுண் மால்வரை
கண்விடுத் தன்ன
வடையா வாயிலவ
னருங்கடை குறுகிச்
செய்ந்நன்றி யறிதலுஞ்
சிற்றின மின்மையு
மின்முக முடையையு
மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு
சிறப்பி னறிந்தோ ரேத்த
210 வஞ்சினர்க்
களித்தலும் வெஞ்சின மின்மையு
மாணணி புகுதலு மழிபடை
தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து
வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங்
காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு
மோடிய துணர்தலு
215 மரியே ருண்க ணரிவைய
ரேத்த
வறிவுமடம் படுதலு
மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும்
வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப்
பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி
போல
220 வின்னகை யாயமோ
டிருந்தோற் குறுகிப்
பைங்க ணூகம்
பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த
வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன
வனப்பின் வாயமைத்து
வயிருசேர் பொழுகிய
வகையமை யகளத்துக்
225 கானக் குமிழின்
கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த
பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந்
திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுரை முற்றிய
பயன்றெரி கேள்விக்
கூடுகொ ளின்னியங்
குரல்குர லாக
230 நூனெறி மரபிற் பண்ணி
யானாது
முதுவோர்க்கு
முகிழ்த்த கையினை யெனவு
மிளையோர்க்கு மலர்ந்த
மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற
கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற
வேலினை யெனவு
235 நீசில மொழியா வளவை
மாசில்
காம்புசொலித் தன்ன
வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன
தேற னல்கிக்
காவெரி யூட்டிய
கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப்
புகழோன் றன்முன்
240 பனிவரை மார்பன் பயந்த
நுண்பொருட்
பனுவலின் வழாஅப்
பல்வே றடிசில்
வாணிற விசும்பிற்
கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி
றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில்
விரும்புவன பேணி
245 யானா விருப்பிற்
றானின் றூட்டித்
திறல்சால் வென்றியொடு
தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர்
மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண்
டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ்
நிதியமொடு
250 பருவ வானத்துப்
பாற்கதிர் பரப்பி
யுருவ வான்மதி
யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ்
நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த
வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின்
சேணோங்கு நெடுஞ்சினைத்
255 ததர்பிணி யவிழ்ந்த
தோற்றம் போல
வுள்ளரக் கெறிந்த
வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர்
கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற
வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு
மதனுடை நோன்றாள்
260 வாண்முகப் பாண்டில்
வலவனொடு தரீஇ
யன்றே விடுக்குமவன்
பரிசின் மென்றோட்
டுகிலணி யல்குற்
றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த
வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப
மஞ்சிடைப் பரப்பித்
265 துணிமழை தவழுந்
துயல்கழை நெடுங்கோட்
டெறிந்துரு மிறந்த
வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான்
கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய
பண்பி
னல்லியக் கோடனை
நயந்தனிர் செலினே
No comments:
Post a Comment