முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Wednesday, March 18, 2015

சிறுபாணாற்றுப்படை-மரபு மூலம்


சிறுபாணாற்றுப்படை
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
 
 
மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை
             யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
            செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
            கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
5          புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
            கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
            லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
             வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
          வேனி னின்ற வெம்பத வழிநாட்
10      காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
            பாலை நின்ற பாலை நெடுவழிச்
           சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
            யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
             நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
15        மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
            மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
             யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
            வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
            தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
20        சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென
             மால்வரை யொழுகிய வாழை வாழைப்
             பூவெனப் பொலிந்த வோதி யோதி
             நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
           களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
25        தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்


 
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென

வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி

னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்

குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த

30        முல்லை சான்ற கற்பின் மெல்லியன்

மடமா னோக்கின் வாணுதல் விறலியர்

நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி

கல்லா விளையர் மெல்லத் தைவரப்

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி

35        னின்குரற் சீரியா ழிடவயிற் றழீஇ

நைவளம் பழுநிய நயந்தெரி பாலை

கைவல் பாண்மகன் கடனரிந் தியக்க

வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்

துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப

40        முனிவிகந் திருந்த முதுவா யிரவல

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்

கழுநீர் மேய்ந்த கயவா யெருமை

பைங்கறி நிவந்த பலவி னீழன்

மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர

45        விளையா விளங்க ணாற மெல்குபு பெயெராக்

குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்

குடபுலங் காவலர் மருமா னொன்னார்

வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த

வெழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன்

50        வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று

நறவுவா யுறைக்கு நாகுமுதிர் நுணவத்

தறைவாய்க் குறுந்துணி யயிலுளி பொருத

கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்

செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி

55        நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த

மகாஅ ரன்ன மந்தி மடவோர்

நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்

வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்

தோள்புர மறைக்கு நல்கூர் நுசுப்பி

60        னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்

தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்

றென்புலங் காவலர் மருமா னொன்னார்

மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்

65        கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்

றமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே யதாஅன்று

நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த

துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை

70        யோவத் தன்ன வுண்டுறை மருங்கிற்

கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்

வருமுலை யன்ன வண்முகை யுடைந்து

திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை

யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன

75        சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை

யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து

காமரு தும்பி காமரஞ் செப்புந்

தண்பணை தழீஇய தளரா விருக்கைக்

குணபுலங் காவலர் மருமா னொன்னா

80        ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந்

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய

னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

85        கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண

நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

90        பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்

பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி

வாலுளைப் புரவியொடு வையக மருள

வீர நன்மொழி யிரவலர்க் கீந்த

வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்

95        கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்

நீல நாக நல்கிய கலிங்க

மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த

சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ

ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்

100      கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி

யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த

வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே

லரவக்கடற் றானை யதிகனுங் காவாது

நட்டோ ருவப்ப நடைப்பரி கார

105      முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாட னள்ளியு நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்

குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த

110      காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

வோரிக் குதிரை யோரியு மெனவாங்

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ

ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

115      வொருதான் றாங்கிய வுரனுடை நோன்றா

ணறுவீ நாகமு மகிலு மாரமுந்

துறையொடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய

பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்

றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய

120      நன்மா விலங்கை மன்ன ருள்ளு

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா

ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்

களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்

பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்

125      பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு

தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை

வான்பொரு நெடுவரை வளனும் பாடி

முன்னாட் சென்றன மாக விந்நா

130      டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பான்முலை கவர்த னோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்

காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த

பூழி பூத்த புழற்கா ளாம்பி

135      யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த

குப்பை வேளை யுப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்

திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு

140      மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட்

டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்

சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி

யாமவ ணின்றும் வருது நீயிரு

மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்

145      செம்ம லுள்ளமொடு செல்குவி ராயி

னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்

தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங்

கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு

நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங்

150      கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப்

பாடல் சான்ற நெய்த னெடுவழி

மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய

பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி

னோங்குநிலை யொட்டகந் துயின்மடிந் தன்ன

155      வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்

கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்

மதியேக் கறூஉ மாசறு திருமுகத்து

நுதிவே னோக்கி னுளைமக ளரித்த

பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்

160      கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான்

றளையவிழ் தெரியற் றகையோற் பாடி

யறற்குழற் பாணி தூங்கி யவரொடு

வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்

பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்

165      கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்

கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்

செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்

கொல்லை நெடுவழிக் கோப மூரவு

முல்லை சான்ற முல்லையம் புறவின்

170      விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச்

சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்

திறல்வே னுதியிற் பூத்த கேணி

விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி

னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை

175      யெயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை யாயமொ

டாமான் சூட்டி னமைவரப் பறுகுவிர்

நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்

குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி

180      நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து

புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்

வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை

முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது

கொங்குகவர் நீலச் செங்கட் சேவன்

185      மதிசே ரரவின் மானத் தோன்று

மருதஞ் சான்ற மருதத் தண்பணை

யந்தண ரருகா வருங்கடி வியனக

ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்

வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி

190      னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை

பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்

தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப

விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த

வவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு

195      கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி

ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்

கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக

ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்

பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா

200      ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப

நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்

சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே

பொருநர்க் காயினும் புலவர்க் காயினு

மருமறை நாவி னந்தணர்க் காயினுங்

205      கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன

வடையா வாயிலவ னருங்கடை குறுகிச்

செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு

மின்முக முடையையு மினிய னாதலுஞ்

செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த

210      வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு

மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்

வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்

கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு

மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு

215      மரியே ருண்க ணரிவைய ரேத்த

வறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்

வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்

பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்

பன்மீ னடுவட் பான்மதி போல

220      வின்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப்

பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன

வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்

மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து

வயிருசேர் பொழுகிய வகையமை யகளத்துக்

225      கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்

புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்

தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்

பாடுதுரை முற்றிய பயன்றெரி கேள்விக்

கூடுகொ ளின்னியங் குரல்குர லாக

230      நூனெறி மரபிற் பண்ணி யானாது

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு

மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு

மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்

தேரோர்க் கழன்ற வேலினை யெனவு

235      நீசில மொழியா வளவை மாசில்

காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்

பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்

காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்

240      பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்

பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்

வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த

விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து

விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி

245      யானா விருப்பிற் றானின் றூட்டித்

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி

விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி

நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்

வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு

250      பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி

யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்

கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்

டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு

சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்

255      ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல

வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்

கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி

யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு

மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்

260      வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ

யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றோட்

டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி

ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்

மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்

265      துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்

டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்

குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்

செல்லிசை நிலைஇய பண்பி

னல்லியக் கோடனை நயந்தனிர் செலினே

No comments:

Post a Comment