மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்
பெருங்கௌசிகனார்
திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு 5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி
னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி 10
நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கி 15
னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா
திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித் 20
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வுரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச் 25
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகம ழைம்பான் 30
மடந்தை மாண்ட நுடங்கெழி லாகத்
தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப
வகடுசேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக் 35
களங்கனி யன்ன கதழ்ந்துகிள ருருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப்
பேரியா
ழமைவரப் பண்ணி யருணெறி திரியா
திசைபெறு திருவின் வேத்தவை யேற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணரொ 40
டுயர்ந்தோங்கு பெருமலை யூறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி னன்ன
துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத் 45
திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவிற்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ 50
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்
கியாமவ ணின்றும் வருது நீயிருங்
கனிபொழி கானங் கிளையொ டுணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளின மானப் 55
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோண்
மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பி
னிசைநுவல் வித்தி னசையே ருழவர்க்குப் 60
புதுநிறை வந்த புனலஞ் சாயன்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வின்னவி றடக்கை மேவரும் பெரும்பூ
ணன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொ
டுள்ளினிர் சேறி ராயிற் பொழுதெதிர்ந்த 65
புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலி
னாற்றி னளவு மசையுநற் புலமும்
வீற்றுவளஞ் சுரக்குமவ னாடுபடு வல்சியு
மலையுஞ் சோலையு மாபுகல் கானமுந்
தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப் 70
பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியு
மிகழுநர்ப் பிணிக்கு மாற்றலும்
புகழுநர்க்
கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின் 75
வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையு
நல்லோர் குழீஇய நாநவி லவையத்து
வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதி னியக்குமவன் சுற்றத் தொழுக்கமு 80
நீரகம் பனிக்கு மஞ்சுவரு கடுந்திறற்
பேரிசை நவிர மேஎ யுறையுங்
காரி யுண்டிக் கடவுள தியற்கையும்
பாயிரு ணீங்கப் பகல்செய்யா வெழுதரு
ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பு 85
மிகந்தன வாயினுந் தெவ்வர் தேஎ
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
கொடைக்கட னிறுத்தவவன் றொல்லோர் வரவு
மிரைதேர்ந் திவருங் கொடுந்தாண்
முதலையொடு 90
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோ யிஞ்சி
யுரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையுங்
கேளினி வேளைநீ முன்னிய திசையே
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் 95
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
வானமின்னு வசிவு பொழிய வானா
திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்க ணிரும்புனத்
தகலிரு விசும்பி னாஅல் போல 100
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
மகுளி பாயாது மலிதுளி தழாலி
னகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
கௌவை போகிய கருங்காய் பிடியேழ் 105
நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பத முற்றன குலவுக்குர லேனல்
விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக்
கிருவிதொறுங்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை 110
மேதி யன்ன கல்பிறங் கியவின்
வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி
யிரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல் 115
வேலீண்டு தொழுதி யிரிவுற் றென்னக்
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத்
திறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பி னறையுற்
றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
புயற்புனிறு போகிய பூமலி புறவி 120
னவற்பதங் கொண்டன வம்பொதித் தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
யையவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக் 125
காயங் கொண்டன விஞ்சி மாவிருந்து
வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக்
குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை
காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென
வூழ்மல ரொழிமுகை யுயர்முகந் தோயத் 130
துறுகல் சுற்றிய சோலை வாழை
யிறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்
கூழுற் றலமரு முந்தூ ழகலறைக்
கால மன்றியு மரம்பயன் கொடுத்தலிற்
காலி னுதிர்ந்தன கருங்கனி நாவன் 135
மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்
துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்
தரலை யுக்கன நெடுந்தா ளாசினி
விரலூன்று படுக ணாகுளி கடுப்பக் 140
குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச்
சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப்
பலவே
தீயி னன்ன வொண்செங் காந்தட் 145
டூவற் கலித்த புதுமுகை யூன்செத்
தறியா தெடுத்த புன்புறச் சேவ
லூஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களங் கடுக்கும் வியலறை தோறு 150
மணவில் கமழு மாமலைச் சாரற்
றேனினர் கிழங்கின ரூனார் வட்டியர்
சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
தூவொடு மலிந்த காய கானவர் 155
செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
யிரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவி
ரன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கிக்
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி 160
யலங்குகழை நரலு மாரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாண்
மான விறல்வேள் வயிரிய மெனினே
நும்மில் போல நில்லாது புக்குக் 165
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம் பகல வினிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவி
ரேறித் தரூஉ மிலங்குமலைத் தாரமொடு 170
வேய்பெயல் விளையுட் டேக்கட் டேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
பழஞ்செறுக் குற்றநும் மனந்த றீர
வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை 175
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி
னின்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து 180
வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்
குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி
யகமலி யுவகை யார்வமொ டளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் 185
செருச்செய் முன்பிற் குருசின் முன்னிய
பரிசின் மறப்ப நீடலு முரியி
ரனைய தன்றவன் மலைமிசை நாடே
நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
வரையர மகளி ரிருக்கை காணினு 190
முயிர்செல வெம்பிப் பனித்தலு முரியிர்
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
விளைபுன நிழத்தலிற் கேழ லஞ்சிப்
புழைதொறு மாட்டிய விருங்க லரும்பொறி
யுடைய வாறே நள்ளிரு ளலரி 195
விரிந்த விடியல் வைகினிர் கழிமி
னளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்
முரம்புகண் ணுடைந்த பரலவற் போழ்விற்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
குறிக்கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச் 200
செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவ
ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ
வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப் 205
பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்க
லிருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
வுயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமி 210
னுரவுக்களிறு கரக்கு மிடங்க ரொடுங்கி
யிரவி னன்ன விருடூங்கு வரைப்பிற்
குமிழி சுழலுங் குண்டுகய முடுக்க
ரகழிழிந் தன்ன கான்யாற்று நடவை
வழூஉமருங் குடைய வழாஅ லோம்பிப் 215
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்
துருவி னன்ன புன்றலை மகாரோ
டொருவி ரொருவி ரோம்பினர் கழிமி
னழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா 220
வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
யடிநிலை தளர்க்கு மருப்பமு முடைய
முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோ
டெருவை மென்கோல் கொண்டனிர் கழிமி
னுயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய 225
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
யோரியாற் றியவின் மூத்த புரிசைப்
பராவரு மரபிற் கடவுட் காணிற் 230
றொழாநிர் கழியி னல்லது வறிது
நும்மியந் தொடுத லோம்புமின் மயங்குதுளி
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே
யலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினுங் 235
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினு
நேர்கொ ணெடுவரை நேமியிற் றொடுத்த
சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினு
ஞெரேரென நோக்க லோம்புமி னுரித்தன்று 240
நிரைசெலன் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே
கழுதிற் சேணோ னேவொடு போகி
யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பி 245
னெறிக்கெடக் கிடந்த விரும்பிண ரெருத்தி
னிருடுணிந் தன்ன வேனங் காணின்
முளிகழை யிழைந்த காடுபடு தீயி
னளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
துகளறத் துணிந்த மணிமரு டெண்ணீர்க் 250
குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி
மிகுத்துப்பதங் கொண்ட பரூஉக்கட்
பொதியினிர்
புட்கை போகிய புன்றலை மகாரோ
டற்கிடை கழித லோம்பி யாற்றநு
மில்புக் கன்ன கல்லளை வதிமி 255
னல்சேர்ந் தல்கி யசைத லோம்பி
வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
கயங்கண் டன்ன வகன்பை யங்கண்
மைந்துமலி சினத்த களிறுமத னழிக்குந் 260
துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி
யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர்
மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து
பெரும்பயங் கழியினு மாந்தர் துன்னா
ரிருங்கால் வீயும் பெருமரக் குழாமு 265
மிடனும் வலனு நினையினிர் நோக்கிக்
குறியறிந் தவையவை குறுகாது கழிமின்
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
கூடியத் தன்ன குரல்புணர் புள்ளி
னாடுகா ணனந்தலை மென்மெல வகன்மின் 270
மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனந்தலைத்
தேஎ மருளு மமைய மாயினு
மிறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்குங்
குறவரு மருளுங் குன்றத்துப் படினே 275
யகன்கட் பாறைத் துவன்றிக் கல்லென
வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின்
பாடி னருவிப் பயங்கெழு மீமிசைக்
காடுகாத் துறையுங் கானவ ருளரே
நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் 280
புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
யுண்டற் கினிய பழனுங் கண்டோர்
மலைதற் கினிய பூவுங் காட்டி
யூறு நிரம்பிய வாறவர் முந்துற
நும்மி னெஞ்சத் தவலம் வீட 285
விம்மென் கடும்போ டினியி ராகுவி
ரறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
குறியவு நெடியவு மூழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கு நோய்கூ ரடுக்கத்
தலர்தாய வரிநிழ லசையினி ரிருப்பிற் 290
பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறு
மருவி நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந் 295
தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை
யிலங்கேந்து மருப்பி னினம்பிரி
யொருத்தல்
விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி 300
னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பி
னெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென
வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாட
றலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை 305
மலைமா ரிடூஉ மேமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவ னோம்பலி
னொண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை யியம்பு மிடியுமிழ் தழங்குகுரல் 310
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப்
பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
கலைகை யற்ற காண்பி னெடுவரை 315
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை
யருங்குறும் பெறிந்த கானவ ருவகை
திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு 320
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை யயருங் குரவை
நல்லெழி னெடுந்தே ரியவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத் 325
துரவுச்சினந் தணித்துப் பெருவெளிற்
பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
யொலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறுங்
கிளிகடி மகளிர் விளிபடு பூச
லினத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு 330
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தி னூறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங்
குழைய
நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை 335
காந்தட் டுடுப்பிற் கமழ்மட லோச்சி
வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ
முண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்றுகடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன வாலைதொறு ஞெரேரெனக் 340
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமுந்
தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையுஞ்
சேம்பு மஞ்சளு மோம்பினர் காப்போர்
பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பு
மென்றிவ் வனைத்து மியைந்தொருங் கீண்டி 345
யவலவு மிசையவுந் துவன்றிப் பலவுட
னலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த
மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்
குரூஉக்கட் பிணையற் கோதை மகளிர்
முழவுத்துயி லறியா வியலு ளாங்கண் 350
விழவி னற்றவன் வியன்கண் வெற்பே
கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டு
முண்டற் கினிய பலபா ராட்டியு
மின்னும் வருவ தாக நமக்கெனத்
தொன்முறை மரபினி ராகிப் பன்மாண் 355
செருமிக்குப் புகலுந் திருவார் மார்ப
னுருமுரறு கருவிய பெருமலை பிற்பட
விரும்பூது கஞலிய வின்குரல் விறலியர்
நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் 360
மைபடு மாமலைப் பனுவலிற் பொங்கிக்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
தூஉ யன்ன துவலை துவற்றலிற்
றேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
காஅய்க் கொண்டநும் மியந்தொய் படாமற் 365
கூவ லன்ன விடரகம் புகுமி
னிருங்க லிகுப்பத் திறுவரை சேராது
குன்றிடம் பட்ட வாரிட ரழுவத்து
நின்று நோக்கினுங் கண்வாள் வௌவு
மண்கனை முழவின் றலைக்கோல் கொண்டு 370
தண்டுகா லாகத் தளர்த லோம்பி
யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே
யயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை
வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கத்துக்
கதிர்சினந் தணிந்த வமயத்துக் கழிமி 375
னுரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு
புரைதவ வுயரிய மழைமருள் பஃறோ
லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறு
முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கொ 380
லின்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகற்
றளிபொழி கானந் தலைதவப் பலவே 385
யொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே
யின்புறு முரற்கைநும் பாட்டுவிருப்
பாகத் 390
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத்
துனைமின்
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புன்முடிந் திடுமின்
செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த 395
கடவு ளோங்கிய காடேசு கவலை
யொட்டா தகன்ற வொன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
யோம்பா வள்ளற் படர்ந்திகு மெனினே 400
மேம்பட வெறுத்தவவன் றொஃறிணை மூதூ
ராங்கன மற்றே நம்ம னோர்க்கே
யசைவுழி யசைஇ யஞ்சாது கழிமின்
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
கலைநின்று விளிக்குங் கானமூ ழிறந்து 405
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிறும்பு கதழு நாறுகொடிப் புறவின்
வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த
வளையான் றீம்பான் மிளைசூழ் கோவலர்
வளையோ ருவப்பத் தருவனர் சொரிதலிற் 410
பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும் 415
பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே
பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய்ம்மயி ரடக்கிய சேக்கை யன்ன
மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் 420
கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக்
கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ 425
யோம்புந ரல்ல துடற்றுந ரில்லை
யாங்குவியங் கொண்மி னதுவதன் பண்பே
தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரு
மும்ப லகைத்த வொண்முறி யாவுந்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி 430
திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
வுண்டனி ராடிக் கொண்டனிர் கழிமின்
செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த 435
சுவல்விளை நெல்லி னவரையம் புளிங்கூ
ழற்கிடை யுழந்தநும் வருத்தம் வீட
வகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும்
பெறுகுவிர்
பொன்னறைந் தன்ன நுண்ணே ரரிசி 440
வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை
தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக
வசையினிர் சேப்பி னல்கலும் பெறுகுவிர்
விசையங் கொழித்த பூழி யன்ன
வுண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை 445
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்
பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்
புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல்லவ லிருந்த வூர்தொறு நல்லியாழ்ப் 450
பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு
நன்பல வுடைத்தவன் றண்பணை நாடே
கண்புமலி பழனங் கமழத் துழைஇ
வலையோர் தந்த விருஞ்சுவல் வாளை 455
நிலையோ ரிட்ட நெடுநாண் டூண்டிற்
பிடிக்கை யன்ன செங்கண் வராஅற்
றுடிக்க ணன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவிற் றராய்க்கண் வைத்த 460
விலங்க லன்ன போர்முதற் றொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேற
லிளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும்
பெறுகுவிர்
முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு 465
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக்
கண்டோர் மருளக் கடும்புட னருந்தி
யெருதெறி களம ரோதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி யசையினிர் கழிமின் 470
வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச்
செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல்
கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந்
துனைசெலற் றலைவா யோவிறந்து வரிக்குங் 475
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாண ரொருகரைக் கொண்டனிர் கழிமி
னிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத் 480
தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென
விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும் 485
பனிவார் காவிற் பல்வண் டிமிரு
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்
பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கு மொள்வாண் மறவர்
கருங்கடை யெஃகஞ் சாத்திய புதவி 490
னருங்கடி வாயி லயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி
வந்தோர் மன்ற வளியர் தாமெனக்
கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னோக்கி 495
விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப்
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட
வெரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்தகப் பட்ட
மடநடை யாமான் கயமுனிக் குழவி 500
யூமை யெண்கின் குடாவடிக் குருளை
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தக
ரரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை
யளைச்செறி யுழுவை கோளுற வெறுத்த 505
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
யரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்
பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை
வரைப்பொலிந் தியலு மடக்கண் மஞ்ஞை
கானக் கோழிக் கவர்குரற் சேவல் 510
கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ
மிடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரந்
தூவற் கலித்த விவர்நனை வளர்கொடி
காஅய்க் கொண்ட நுகமரு ணூறை 515
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்த
ணாகந் திலக நறுங்கா ழாரங் 520
கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப்
பசுங்கறி
திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்
கானிலை யெருமை கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅ 525
லுடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி
வானத் தன்ன வளமலி யானைத் 530
தாதெருத் ததைந்த முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்பக்
கழைவளர் தூம்பின் கண்ணிட மிமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் 535
கடவ தறிந்த வின்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ
தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்
குன்றா நல்லிசைச் சென்றோ ரும்ப 540
லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
விடைத்தெரிந் துணரும் பெரியோர்
மாய்ந்தெனக்
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
சென்றது நொடியவும் விடாஅ னசைதர 545
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்
பொருமுர ணெதிரிய வயவரொடு பொலிந்து
திருநகர் முற்ற மணுகல் வேண்டிக்
கல்லெ னொக்க னல்வலத் திரீஇ
யுயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத் 550
தகன்ற தாயத் தஃகிய நுட்பத்
திலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக்
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று 555
வடுவா ழெக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த
நாளெனப்
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ
யுள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி
துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி 560
யிழைமருங் கறியா நுழைநூற் கலிங்க
மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவ றந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லி னரிசிமுட் டாது
தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து 565
பலநா ணிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப்
பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட்
டலைவன் றாமரை மலைய விறலியர்
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய 570
நீரியக் கன்ன நிரைசெல னெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரைமருள் வேழங்
கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நிலந்தினக் கிடந்த நிதியமோ டனைத்து 575
மிலம்படு புலவ ரேற்றகைந் நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழைசுரந் தன்ன வீகை நல்கித் 580
தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
வென்றெழு கொடியிற் றோன்றுங்
குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே
No comments:
Post a Comment