முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.

Friday, March 20, 2015

மலைபடுகடாம்-மரபு மூலம்


மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
 

திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு                                         5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி
னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி                                                    10
நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கி                                                           15
னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா
திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித்                                           20
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வுரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச்                                                      25



சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகம ழைம்பான்                                                    30
மடந்தை மாண்ட நுடங்கெழி லாகத்

தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப

வகடுசேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது

கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி

நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்                                                        35

களங்கனி யன்ன கதழ்ந்துகிள ருருவின்

வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியா

ழமைவரப் பண்ணி யருணெறி திரியா

திசைபெறு திருவின் வேத்தவை யேற்பத்

துறைபல முற்றிய பைதீர் பாணரொ                                                          40

டுயர்ந்தோங்கு பெருமலை யூறின் றேறலின்

மதந்தபு ஞமலி நாவி னன்ன

துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடிக்

கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ

விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்                                                45

திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்

கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்

புனல்கால் கழீஇய மணல்வார் புறவிற்

புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்

கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ                                                   50

தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்

மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்

கியாமவ ணின்றும் வருது நீயிருங்

கனிபொழி கானங் கிளையொ டுணீஇய

துனைபறை நிவக்கும் புள்ளின மானப்                                                     55

புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்

வனைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோண்

மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன்

முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பி

னிசைநுவல் வித்தி னசையே ருழவர்க்குப்                                           60

புதுநிறை வந்த புனலஞ் சாயன்

மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி

வின்னவி றடக்கை மேவரும் பெரும்பூ

ணன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொ

டுள்ளினிர் சேறி ராயிற் பொழுதெதிர்ந்த                                                  65

புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலி

னாற்றி னளவு மசையுநற் புலமும்

வீற்றுவளஞ் சுரக்குமவ னாடுபடு வல்சியு

மலையுஞ் சோலையு மாபுகல் கானமுந்

தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப்                                             70

பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்

புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியு

மிகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க்

கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு

தூத்துளி பொழிந்த பொய்யா வானின்                                                       75

வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையு

நல்லோர் குழீஇய நாநவி லவையத்து

வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்

சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி

நல்லிதி னியக்குமவன் சுற்றத் தொழுக்கமு                                          80

நீரகம் பனிக்கு மஞ்சுவரு கடுந்திறற்

பேரிசை நவிர மேஎ யுறையுங்

காரி யுண்டிக் கடவுள தியற்கையும்

பாயிரு ணீங்கப் பகல்செய்யா வெழுதரு

ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பு                                                       85

மிகந்தன வாயினுந் தெவ்வர் தேஎ

நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்

புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்

கொடைக்கட னிறுத்தவவன் றொல்லோர் வரவு

மிரைதேர்ந் திவருங் கொடுந்தாண் முதலையொடு                          90

திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்

வரைபுரை நிவப்பின் வான்றோ யிஞ்சி

யுரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையுங்

கேளினி வேளைநீ முன்னிய திசையே

மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்                                                         95

புதுவது வந்தன் றிதுவதன் பண்பே

வானமின்னு வசிவு பொழிய வானா

திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்

பெயலொடு வைகிய வியன்க ணிரும்புனத்

தகலிரு விசும்பி னாஅல் போல                                                                    100

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை

நீலத் தன்ன விதைப்புன மருங்கின்

மகுளி பாயாது மலிதுளி தழாலி

னகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்

கௌவை போகிய கருங்காய் பிடியேழ்                                                     105

நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்

பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்

கொய்பத முற்றன குலவுக்குர லேனல்

விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக் கிருவிதொறுங்

குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை                                        110

மேதி யன்ன கல்பிறங் கியவின்

வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி

யிரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே

பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு

வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல்                              115

வேலீண்டு தொழுதி யிரிவுற் றென்னக்

காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்

குறையறை வாரா நிவப்பி னறையுற்

றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே

புயற்புனிறு போகிய பூமலி புறவி                                                                  120

னவற்பதங் கொண்டன வம்பொதித் தோரை

தொய்யாது வித்திய துளர்படு துடவை

யையவி யமன்ற வெண்காற் செறுவின்

மையென விரிந்தன நீணறு நெய்தல்

செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக்                                             125

காயங் கொண்டன விஞ்சி மாவிருந்து

வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும்

விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை

காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென

வூழ்மல ரொழிமுகை யுயர்முகந் தோயத்                                             130

துறுகல் சுற்றிய சோலை வாழை

யிறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்

கூழுற் றலமரு முந்தூ ழகலறைக்

கால மன்றியு மரம்பயன் கொடுத்தலிற்

காலி னுதிர்ந்தன கருங்கனி நாவன்                                                             135

மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை

நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்

துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்

தரலை யுக்கன நெடுந்தா ளாசினி

விரலூன்று படுக ணாகுளி கடுப்பக்                                                              140

குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்

கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச்

சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி

முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே

தீயி னன்ன வொண்செங் காந்தட்                                                                 145

டூவற் கலித்த புதுமுகை யூன்செத்

தறியா தெடுத்த புன்புறச் சேவ

லூஉ னன்மையி னுண்ணா துகுத்தென

நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்

வெறிக்களங் கடுக்கும் வியலறை தோறு                                                150

மணவில் கமழு மாமலைச் சாரற்

றேனினர் கிழங்கின ரூனார் வட்டியர்

சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கிப்

பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்

தூவொடு மலிந்த காய கானவர்                                                                     155

செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே

யிரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவி

ரன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கிக்

கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி                                                                  160

யலங்குகழை நரலு மாரிப் படுகர்ச்

சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்றாண்

மான விறல்வேள் வயிரிய மெனினே

நும்மில் போல நில்லாது புக்குக்                                                                     165

கிழவிர் போலக் கேளாது கெழீஇச்

சேட்புலம் பகல வினிய கூறிப்

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவி

ரேறித் தரூஉ மிலங்குமலைத் தாரமொடு                                               170

வேய்பெயல் விளையுட் டேக்கட் டேறல்

குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்

பழஞ்செறுக் குற்றநும் மனந்த றீர

வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை                                      175

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி

னின்புளிக் கலந்து மாமோ ராகக்

கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து                                                    180

வழையமை சாரல் கமழத் துழைஇ

நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்

குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி

யகமலி யுவகை யார்வமொ டளைஇ

மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்                                      185

செருச்செய் முன்பிற் குருசின் முன்னிய

பரிசின் மறப்ப நீடலு முரியி

ரனைய தன்றவன் மலைமிசை நாடே

நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்

வரையர மகளி ரிருக்கை காணினு                                                             190

முயிர்செல வெம்பிப் பனித்தலு முரியிர்

பலநா ணில்லாது நிலநாடு படர்மின்

விளைபுன நிழத்தலிற் கேழ லஞ்சிப்

புழைதொறு மாட்டிய விருங்க லரும்பொறி

யுடைய வாறே நள்ளிரு ளலரி                                                                       195

விரிந்த விடியல் வைகினிர் கழிமி

னளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்

முரம்புகண் ணுடைந்த பரலவற் போழ்விற்

கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே

குறிக்கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச்                                                 200

செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச

வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்

புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவ

ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ

வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப்                                        205

பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்க

லிருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்லெனக்

கருவிர லூகம் பார்ப்போ டிரிய

வுயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன

வரும்விசை தவிராது மரமறையாக் கழிமி                                          210

னுரவுக்களிறு கரக்கு மிடங்க ரொடுங்கி

யிரவி னன்ன விருடூங்கு வரைப்பிற்

குமிழி சுழலுங் குண்டுகய முடுக்க

ரகழிழிந் தன்ன கான்யாற்று நடவை

வழூஉமருங் குடைய வழாஅ லோம்பிப்                                                215

பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்

துருவி னன்ன புன்றலை மகாரோ

டொருவி ரொருவி ரோம்பினர் கழிமி

னழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்

விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா                                           220

வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி

யடிநிலை தளர்க்கு மருப்பமு முடைய

முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோ

டெருவை மென்கோல் கொண்டனிர் கழிமி

னுயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய                                                    225

மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்

தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்

சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி

யோரியாற் றியவின் மூத்த புரிசைப்

பராவரு மரபிற் கடவுட் காணிற்                                                                   230

றொழாநிர் கழியி னல்லது வறிது

நும்மியந் தொடுத லோம்புமின் மயங்குதுளி

மாரி தலையுமவன் மல்லல் வெற்பே

யலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்

கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினுங்                                                          235

கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன

நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினு

நேர்கொ ணெடுவரை நேமியிற் றொடுத்த

சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினு

ஞெரேரென நோக்க லோம்புமி னுரித்தன்று                                           240

நிரைசெலன் மெல்லடி நெறிமாறு படுகுவிர்

வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே

கழுதிற் சேணோ னேவொடு போகி

யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி

நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பி                                                             245

னெறிக்கெடக் கிடந்த விரும்பிண ரெருத்தி

னிருடுணிந் தன்ன வேனங் காணின்

முளிகழை யிழைந்த காடுபடு தீயி

னளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து

துகளறத் துணிந்த மணிமரு டெண்ணீர்க்                                               250

குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி

மிகுத்துப்பதங் கொண்ட பரூஉக்கட் பொதியினிர்

புட்கை போகிய புன்றலை மகாரோ

டற்கிடை கழித லோம்பி யாற்றநு

மில்புக் கன்ன கல்லளை வதிமி                                                                      255

னல்சேர்ந் தல்கி யசைத லோம்பி

வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து

கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்

கயங்கண் டன்ன வகன்பை யங்கண்

மைந்துமலி சினத்த களிறுமத னழிக்குந்                                                 260

துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி

யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர்

மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து

பெரும்பயங் கழியினு மாந்தர் துன்னா

ரிருங்கால் வீயும் பெருமரக் குழாமு                                                          265

மிடனும் வலனு நினையினிர் நோக்கிக்

குறியறிந் தவையவை குறுகாது கழிமின்

கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்

கூடியத் தன்ன குரல்புணர் புள்ளி

னாடுகா ணனந்தலை மென்மெல வகன்மின்                                        270

மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின்

ஞாயிறு தெறாஅ மாக நனந்தலைத்

தேஎ மருளு மமைய மாயினு

மிறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்குங்

குறவரு மருளுங் குன்றத்துப் படினே                                                        275

யகன்கட் பாறைத் துவன்றிக் கல்லென

வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின்

பாடி னருவிப் பயங்கெழு மீமிசைக்

காடுகாத் துறையுங் கானவ ருளரே

நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள்                                                  280

புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி

யுண்டற் கினிய பழனுங் கண்டோர்

மலைதற் கினிய பூவுங் காட்டி

யூறு நிரம்பிய வாறவர் முந்துற

நும்மி னெஞ்சத் தவலம் வீட                                                                           285

விம்மென் கடும்போ டினியி ராகுவி

ரறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு

குறியவு நெடியவு மூழிழிபு புதுவோர்

நோக்கினும் பனிக்கு நோய்கூ ரடுக்கத்

தலர்தாய வரிநிழ லசையினி ரிருப்பிற்                                                   290

பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ

கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்

மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறு

மருவி நுகரும் வானர மகளிர்

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந்                                       295

தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை

யிலங்கேந்து மருப்பி னினம்பிரி யொருத்தல்

விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்

புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்

சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி                                                             300

னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை

கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பி

னெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென

வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாட

றலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை                                                 305

மலைமா ரிடூஉ மேமப் பூசல்

கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி

வலிக்குவரம் பாகிய கணவ னோம்பலி

னொண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு

நெடுவரை யியம்பு மிடியுமிழ் தழங்குகுரல்                                          310

கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி

யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு

முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்

சிறுமை யுற்ற களையாப் பூசல்

கலைகை யற்ற காண்பி னெடுவரை                                                          315

நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்

பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை

யருங்குறும் பெறிந்த கானவ ருவகை

திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென

நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு                                           320

மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென

வான்றோய் மீமிசை யயருங் குரவை

நல்லெழி னெடுந்தே ரியவுவந் தன்ன

கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை

நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்                                                          325

துரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்

விரவுமொழி பயிற்றும் பாக ரோதை

யொலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறுங்

கிளிகடி மகளிர் விளிபடு பூச

லினத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு                                                       330

மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை

மாறா மைந்தி னூறுபடத் தாக்கிக்

கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப

வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய

நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை                                                335

காந்தட் டுடுப்பிற் கமழ்மட லோச்சி

வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ

முண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்

கன்றுகடாஅ வுறுக்கு மகாஅ ரோதை

மழைகண் டன்ன வாலைதொறு ஞெரேரெனக்                                    340

கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமுந்

தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையுஞ்

சேம்பு மஞ்சளு மோம்பினர் காப்போர்

பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பு

மென்றிவ் வனைத்து மியைந்தொருங் கீண்டி                                      345

யவலவு மிசையவுந் துவன்றிப் பலவுட

னலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த

மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்

குரூஉக்கட் பிணையற் கோதை மகளிர்

முழவுத்துயி லறியா வியலு ளாங்கண்                                                    350

விழவி னற்றவன் வியன்கண் வெற்பே

கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டு

முண்டற் கினிய பலபா ராட்டியு

மின்னும் வருவ தாக நமக்கெனத்

தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்                                                     355

செருமிக்குப் புகலுந் திருவார் மார்ப

னுருமுரறு கருவிய பெருமலை பிற்பட

விரும்பூது கஞலிய வின்குரல் விறலியர்

நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்

கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்                                             360

மைபடு மாமலைப் பனுவலிற் பொங்கிக்

கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி

தூஉ யன்ன துவலை துவற்றலிற்

றேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு

காஅய்க் கொண்டநும் மியந்தொய் படாமற்                                           365

கூவ லன்ன விடரகம் புகுமி

னிருங்க லிகுப்பத் திறுவரை சேராது

குன்றிடம் பட்ட வாரிட ரழுவத்து

நின்று நோக்கினுங் கண்வாள் வௌவு

மண்கனை முழவின் றலைக்கோல் கொண்டு                                     370

தண்டுகா லாகத் தளர்த லோம்பி

யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே

யயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை

வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கத்துக்

கதிர்சினந் தணிந்த வமயத்துக் கழிமி                                                        375

னுரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு

புரைதவ வுயரிய மழைமருள் பஃறோ

லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய

பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறு

முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கொ                                  380

லின்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி

மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்

கைபிணி விடாஅது பைபயக் கழிமின்

களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகற்

றளிபொழி கானந் தலைதவப் பலவே                                                       385

யொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்தென

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட

கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே

யின்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத்                                             390

தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்

பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்

சந்து நீவிப் புன்முடிந் திடுமின்

செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்

கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த                                                395

கடவு ளோங்கிய காடேசு கவலை

யொட்டா தகன்ற வொன்னாத் தெவ்வர்

சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே

தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை

யோம்பா வள்ளற் படர்ந்திகு மெனினே                                                    400

மேம்பட வெறுத்தவவன் றொஃறிணை மூதூ

ராங்கன மற்றே நம்ம னோர்க்கே

யசைவுழி யசைஇ யஞ்சாது கழிமின்

புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்

கலைநின்று விளிக்குங் கானமூ ழிறந்து                                                  405

சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை

தலையிறும்பு கதழு நாறுகொடிப் புறவின்

வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த

வளையான் றீம்பான் மிளைசூழ் கோவலர்

வளையோ ருவப்பத் தருவனர் சொரிதலிற்                                          410

பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்

புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்

பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன

தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்

கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும்                                                415

பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே

பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்

துய்ம்மயி ரடக்கிய சேக்கை யன்ன

மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்

தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின்                                                          420

கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்

கொடுவிற் கூளியர் கூவை காணிற்

படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக்

கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே

தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ                                                                 425

யோம்புந ரல்ல துடற்றுந ரில்லை

யாங்குவியங் கொண்மி னதுவதன் பண்பே

தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரு

மும்ப லகைத்த வொண்முறி யாவுந்

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி                                                           430

திரங்குமர னாரிற் பொலியச் சூடி

முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென

வுண்டனி ராடிக் கொண்டனிர் கழிமின்

செவ்வீ வேங்கைப் பூவி னன்ன

வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த                                                             435

சுவல்விளை நெல்லி னவரையம் புளிங்கூ

ழற்கிடை யுழந்தநும் வருத்தம் வீட

வகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய

புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்

பொன்னறைந் தன்ன நுண்ணே ரரிசி                                                          440

வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை

தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக

வசையினிர் சேப்பி னல்கலும் பெறுகுவிர்

விசையங் கொழித்த பூழி யன்ன

வுண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை                                               445

நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்

பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்

புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்

புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்

மெல்லவ லிருந்த வூர்தொறு நல்லியாழ்ப்                                             450

பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்

பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு

நன்பல வுடைத்தவன் றண்பணை நாடே

கண்புமலி பழனங் கமழத் துழைஇ

வலையோர் தந்த விருஞ்சுவல் வாளை                                                  455

நிலையோ ரிட்ட நெடுநாண் டூண்டிற்

பிடிக்கை யன்ன செங்கண் வராஅற்

றுடிக்க ணன்ன குறையொடு விரைஇப்

பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்

ஞெண்டாடு செறுவிற் றராய்க்கண் வைத்த                                          460

விலங்க லன்ன போர்முதற் றொலைஇ

வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்

துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேற

லிளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்

முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு                                       465

வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்

திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக்

கண்டோர் மருளக் கடும்புட னருந்தி

யெருதெறி களம ரோதையொடு நல்யாழ்

மருதம் பண்ணி யசையினிர் கழிமின்                                                       470

வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச்

செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல்

கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி

வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந்

துனைசெலற் றலைவா யோவிறந்து வரிக்குங்                                  475

காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்

யாண ரொருகரைக் கொண்டனிர் கழிமி

னிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்

பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ

வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்                                                  480

தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென

விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்

கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு

மலையென மழையென மாட மோங்கித்

துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும்                                                       485

பனிவார் காவிற் பல்வண் டிமிரு

நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்

பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப்

பருந்துபடக் கடக்கு மொள்வாண் மறவர்

கருங்கடை யெஃகஞ் சாத்திய புதவி                                                            490

னருங்கடி வாயி லயிராது புகுமின்

மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்

வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி

வந்தோர் மன்ற வளியர் தாமெனக்

கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னோக்கி                                                  495

விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப்

பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட

வெரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்

தொழுதி போக வலிந்தகப் பட்ட

மடநடை யாமான் கயமுனிக் குழவி                                                         500

யூமை யெண்கின் குடாவடிக் குருளை

மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்

வரைவாழ் வருடை வன்றலை மாத்தக

ரரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை

யளைச்செறி யுழுவை கோளுற வெறுத்த                                              505

மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி

யரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்

பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை

வரைப்பொலிந் தியலு மடக்கண் மஞ்ஞை

கானக் கோழிக் கவர்குரற் சேவல்                                                                 510

கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ

மிடிக்கலப் பன்ன நறுவடி மாவின்

வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரந்

தூவற் கலித்த விவர்நனை வளர்கொடி

காஅய்க் கொண்ட நுகமரு ணூறை                                                             515

பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி

குரூஉப்புலி பொருத புண்கூர் யானை

முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்

வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்த

ணாகந் திலக நறுங்கா ழாரங்                                                                           520

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி

திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்

கானிலை யெருமை கழைபெய் தீந்தயிர்

நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை

நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅ                                                            525

லுடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங்

குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி

கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப

நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி

வானத் தன்ன வளமலி யானைத்                                                                  530

தாதெருத் ததைந்த முற்ற முன்னி

மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்பக்

கழைவளர் தூம்பின் கண்ணிட மிமிர

மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்

நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்                                                  535

கடவ தறிந்த வின்குரல் விறலியர்

தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ

தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை

விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்

குன்றா நல்லிசைச் சென்றோ ரும்ப                                                            540

லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப

விடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்

கொடைக்கட னிறுத்த செம்ம லோயென

வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்

சென்றது நொடியவும் விடாஅ னசைதர                                                  545

வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்

பொருமுர ணெதிரிய வயவரொடு பொலிந்து

திருநகர் முற்ற மணுகல் வேண்டிக்

கல்லெ னொக்க னல்வலத் திரீஇ

யுயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத்                                                                  550

தகன்ற தாயத் தஃகிய நுட்பத்

திலமென மலர்ந்த கைய ராகித்

தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்

நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக்

கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று                                                            555

வடுவா ழெக்கர் மணலினும் பலரே

அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்

பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு

நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி

துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி                                                 560

யிழைமருங் கறியா நுழைநூற் கலிங்க

மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ

முடுவ றந்த பைந்நிணத் தடியொடு

நெடுவெ ணெல்லி னரிசிமுட் டாது

தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து                                                      565

பலநா ணிற்பினும் பெறுகுவிர் நில்லாது

செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென

மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட்

டலைவன் றாமரை மலைய விறலியர்

சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய                                                   570

நீரியக் கன்ன நிரைசெல னெடுந்தேர்

வாரிக் கொள்ளா வரைமருள் வேழங்

கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை

பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி

நிலந்தினக் கிடந்த நிதியமோ டனைத்து                                                   575

மிலம்படு புலவ ரேற்றகைந் நிறையக்

கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்

வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்

கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென

மழைசுரந் தன்ன வீகை நல்கித்                                                                     580

தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்

வென்றெழு கொடியிற் றோன்றுங்

குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே

 

 

 

No comments:

Post a Comment