முகவுரை


சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களே. இவை கடைச்சங்க கால இலக்கியங்கள் எனப்படும். இவற்றுக்குரிய இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் வரையறுத்துள்ள இலக்கண விதிகளின்படி சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன. மலைபடுகடாம் என்பது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். எனவே முதல் நான்கும், இறுதியும் ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும்.

எட்டுத்தொகை என்பது எட்டு தொகைநூல்களின் தொகுப்பாகும். தொகைநூல் என்பது பல பாடல்களின் தொகுப்பாகும். இவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பல புலவர்களால் பாடப்பட்ட பல பாடல்களைக் கொண்டவை.
Showing posts with label பத்துப்பாட்டு-மரபு மூலம். Show all posts
Showing posts with label பத்துப்பாட்டு-மரபு மூலம். Show all posts

Friday, March 20, 2015

மலைபடுகடாம்-மரபு மூலம்


மலைபடுகடாம்
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
 

திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு                                         5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி
னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி                                                    10
நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கி                                                           15
னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா
திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித்                                           20
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வுரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச்                                                      25

பட்டினப்பாலை-மரபு மூலம்


பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா                                     5
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி                                                    10
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கத்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெறுமை முழுக்குழவி
கூட்டுநிழற் றுயில்வதியுங்                                                 15
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்கமுகிற் கமழ்மஞ்ச
ளினமாவி னிணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
யகனகர் வியன்முற்றத்துச்                                                 20
சுடர்நுதன் மடநோக்கி
னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்                            25

குறிஞ்சிப்பாட்டு-மரபு மூலம்


குறிஞ்சிப்பாட்டு
கபிலர்

 
அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத
லொலிமென் கூந்தலென் றோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ
யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும்                                           5
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரையு மோச்சியு மலவுற்
றெய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் றொலையவு நறுந்தோ ணெகிழவும்
புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு                                           10
முட்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்                                                    15
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த
லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை
யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி                                                         20
யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலிற் பழியு முண்டோ
வாற்றீன் வாரா ராயினு மாற்ற
வேனை யுலகத்து மியைவதா னமக்கென
மானமர் நோக்கங் கலங்கிக் கையற்                                                    25

Thursday, March 19, 2015

நெடுநல்வாடை-மரபு மூலம்


நெடுநல்வாடை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

 

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட                          5
னீடிதழ்க் கண்ணி நீரலைக் களாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயன் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை                                         10       
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாட்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி                    15
யிருங்களி பரந்த வீர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
யகலிரு விசும்பிற் றுவலை கற்ப                                    20
வங்க ணகல்வய லார்பெயற் கலித்த
வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு                          25

மதுரைக் காஞ்சி-மரபு மூலம்


மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார்
 

ஓங்குதிரை வியன்பரப்பி
னொலிமுந்நீர் வரம்பாகத்
தேன்றூங்கு முயர்சிமைய
மலைநாறிய வியன்ஞாலத்து
வலமாதிரத்தான் வளிகொட்ப                                   5
வியனாண்மீ னெறியொழுகப்
பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு
மிரவுச்செய்யும் வெண்டிங்களு
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க
மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத்             10
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்குவிளங்க
மேதக மிகப்பொலிந்த
வோங்குநிலை வயக்களிறு                                     15
கண்டுதண்டாக் கட்கின்பத்
துண்டுதண்டா மிகுவளத்தா
யர்பூரிம விழுத்தெருவிற்
பொய்யறியா வாய்மொழியாற்
புகழ்நிறைந்த நன்மாந்தரொடு                                20       
நல்லூழி யடிப்படரப்
பல்வெள்ள மீக்கூற
வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக
பிணக்கோட்ட களிற்றுக்குழும்பி
னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி                           25

முல்லைப்பாட்டு-மரபு மூலம்


முல்லைப்பாட்டு
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
 
 

நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி                           5
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது                                        10
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
னுறுதுய ரலமர னோக்கு யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர                                15
வின்னே வருகுவர் தாய ரென்போ
ணன்னர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது நீநின்                                                  20
பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி                                   25

பெரும்பாணாற்றுப்படை-மரபு மூலம்


பெரும்பாணாற்றுப்படை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 
 

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத                 5
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப்                 10
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
னெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்                   15
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந்
தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந் தேரும் பறவை போலக்                         20
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண
பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்
கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு              25

Wednesday, March 18, 2015

சிறுபாணாற்றுப்படை-மரபு மூலம்


சிறுபாணாற்றுப்படை
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
 
 
மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை
             யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
            செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
            கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
5          புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
            கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
            லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
             வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
          வேனி னின்ற வெம்பத வழிநாட்
10      காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
            பாலை நின்ற பாலை நெடுவழிச்
           சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
            யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
             நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
15        மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
            மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
             யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
            வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
            தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
20        சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென
             மால்வரை யொழுகிய வாழை வாழைப்
             பூவெனப் பொலிந்த வோதி யோதி
             நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
           களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
25        தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்

பொருநராற்றுப்படை-மரபு மூலம்


பொருநராற்றுப்படை
முடத்தாமக்கண்ணியார்
 

      அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
       சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
       வேறுபுல முன்னிய விரகறி பொருந
       குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
5     விளக்கழ லுருவின் விசியுரு பச்சை
        யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
        றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
        பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
        யளைவா ழலவன் கண்கண் டன்ன
10    துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
         யெண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
        யண்ணா வில்லா வமைவரு வறுவாய்ப்
        பாம்பணந் தன்ன வோங்கிரு மறுப்பின்
        மாயோண் முன்கை யாய்தொடி கடுக்குங்
15    கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி
          னாய்தினை யரிசி யவைய லன்ன
         வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
          கேள்வி போகிய நீள்விசித் தொடையன்
         மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
20    வணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி
          யாறலை கள்வர் படைவிட வருளின்
         மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை
         வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ்
         சீருடை நன்மொழி நீரொடு சிதறி
25    யறல்போற் கூந்தற் பிறைபோற் றிருநுதற்

திருமுருகாற்றுப்படை-மரபு மூலம்


திருமுருகாற்றுப்படை
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்

     உலக முவப்ப வலனேர்பு திரிதரு
     பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
     கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
     யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
5 செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
     மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
     கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
     வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
     தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
10 திருள்படப் பொதுளிய பராரை மராஅத்
     துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்
     மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
     கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக்
     கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்
15கோபத் தன்ன தோயாப் பூந்துகிற்
     பல்காசு நிரைத்த சில்கா ழல்குற்
     கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி
     னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
     சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
20 துணையோ ராய்ந்த விணையீ ரோதிச்
     செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
     பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
     தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
     திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
25 மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்